வடக்கில் 78.4 சதுர கிலோ மீற்றர் பரப்பில் இன்னமும் நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்படவில்லை என ஹலோ ட்ரஸ்ட் நிறுவனத்தின் முகாமையாளர் டேமியன் பிரான்ஸிஸ் ஓ பிரெய்ன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதற்காக ஜப்பான் 108 மில்லியன் ரூபாவினை உதவியாக வழங்கியுள்ளது.
இந்த உதவி வழங்கும் நிகழ்வில் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் கெனிச்சி சுகானுமாவும் பங்கேற்றிருந்தார்.
இந்த உதவியைக் கொண்டு தமது நிறுவனம் வடக்கில் 200,000மாம் நிலக்கண்ணி வெடியை அகற்றும் என பிரெய்ன் தெரிவித்துள்ளார்.
2020ம் ஆண்டு அளவில் நிலக்கண்ணி வெடியற்ற நாடாக இலங்கையை மாற்றுவதற்கு எடுக்கப்பட்டு வரும் முனைப்புக்கள் வெற்றியளிக்கும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ஜப்பானிய அரசாங்கத்தின் உதவியானால் 33000 பேர் நன்மை அடைய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.