வடக்கு கிழக்கில் இன்று அரசியல் கைதிகளின் விடுதலைக்காக பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. இதற்கு நன்றி தெரிவிக்கும் முகமாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான திரு. சிவசக்தி ஆனந்தன் அவர்கள் இன்று மாலை 3.15 மணி அளவில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை ஏற்படுத்தி அனைத்து வர்த்தக நண்பர்களுக்கும் அரச தனியார் நிறுவனங்களுக்கும் மற்றும் ஹர்த்தாலை மேற்கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.