வவுனியாவில் சிறுமி கடத்தல் முயற்சி தடயப் பொருட்களை கைப்பற்றியும் சந்தேக நர்பர்களை கைது செய்யாத பொலிசார்..!

159

வவுனியாவில் சிறுமி ஒருவரை நடு இரவில் வீடு புகுந்து கடத்த முயற்சித்த சம்பவத்தில் சந்தேக நபர்கள் 12 நாட்களாகியும் கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

வவுனியா கீரிசுட்டான் கிராமத்தில் 10 வயது சிறுமியை நடு இரவில் வீடு புகுந்து தூக்கிச் சென்ற மர்ம நபர்களுடையது என சந்தேகிக்கும் ஒரு சோடி செருப்பு மற்றும் சந்தேக நபர்கள் கொண்டு வந்ததாக சந்தேகிக்கப்படும் ‘நைலோன்’ கயிறு போன்றன பொலிசாரால் மீட்கப்பட்ட நிலையில் பல நாட்களாகியும் சந்தேக நபர்கள் கைது செய்யப்படாமையானது கிராமத்தில் அச்சநிலைய உருவாக்கியுள்ளது.

வவுனியா நெடுங்கேணி பிரதேச செயலகத்திற்குட்பட்ட கீரிசுட்டான் பகுதியில் 12-10-2017 அன்று நடு இரவில் வீட்டிற்குள் புகுந்த மர்மநபர் நித்திரையில் இருந்த சிறுமியை தூக்கிச் சென்ற வேளை விழித்துக்கொண்ட சிறுமியின் தந்தை கடத்தல்காரனை துரத்திச் சென்ற போது சிறுமியை கைவிட்டு மர்மநபர்கள் தப்பிச்சென்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக 13-10-2017 அன்று காலையில் நெடுங்கேணி பொலிஸ் நிலையத்தில் சிறுமியின் தாயாரால் முறைப்பாடு செய்யப்பட்டதை தொடர்ந்து சம்பவம் நடைபெற்ற வீட்டிற்கு சென்ற நெடுங்கேணி பொலிசார் தடயப்பொருட்களை கைப்பற்றியதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

குறித்த சிறுமி கடத்தல் முயற்சி சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை நெடுங்கேணி பொலிசார் கைது செய்யாத காரணத்தினால் மீண்டும் 20-10-2017 அன்று நெடுஙகேணி பொலிஸ் நிலையம் சென்று முறைப்பாடு மேற்கொண்டதுடன் தாங்கள் அச்சநிலையில் வாழ்ந்துவருவதாகவும் உடனடியாக இச்சம்பவம் குறித்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் பொலிசாரிடம் வேண்டுகோள் விடுத்ததுடன்! 23-10-2017 அன்று வன்னி மாவட்ட பிரதிபொலிஸ் மா அதிபர் காரியாலயத்தில் இயங்கும் பொதுமக்கள் முறைப்பாட்டுப் பிரிவிற்கு முறைப்பாடு செய்தநிலையிலும் சந்தேக நபர்கள் கைது செய்யப்படவில்லை.

கடத்த முயற்சிக்கப்பட்ட சிறுமியை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஒலுமடு கிராமத்தை சேர்ந்த 65 வயதுடைய சுப்பிரமணியம் என்ற நபர் சிறைவாசம் அனுபவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

SHARE