வவுனியா தனியார் போக்குவரத்து சாரதி பயிற்சி நிலையத்திற்கு சொந்தமான முச்சக்கரவண்டி பேரூந்துடன் நேருக்கு நேர் மோதி விபத்து

233

வவுனியா தனியார் போக்குவரத்து சாரதி  பயிற்சி நிலையத்திற்கு சொந்தமான முச்சக்கரவண்டி  இன்று காலை 10.15 மணி அளவில்  வவுனியா தாண்டிக்குளம் சாந்தசோலை A9 வீதியின் சந்தியில்  தனியாருக்கு சொந்தமான சுற்றுலா பேரூந்துடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியது. மேலும் முச்சக்கரவண்டியில் பயணம் செய்தவர்கள் இருவர் எனவும் அவர்கள் பயிற்சியில் ஈடுபட்ட தருணத்திலே இவ்விபத்து இடம்பெற்றதாக குறிப்பிடப்படுகிறது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது பாதுகாப்புக்கடவையில் ( மஞ்சள் கோடு )   குறிப்பிட்ட பேரூந்தானது இன்னொரு வாகனத்தை  முந்திச்செல்ல  முற்பட்ட வேளை இவ்விபத்து  இடம்பெற்றதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் குறிப்பிட்டனர். விபத்திற்குள்ளாகிய இருவரில் ஒருவருக்கு 40 வயதை அண்மித்தாகவும் மற்றையவர் 25 வயது மதிக்கத்தக்கவராக காணப்படுகிறார். இதில் 40 வயதை அண்மித்தவர்  வவுனியா பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்விபத்து தொடர்பான மேல் விசாரனைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருவதுடன் விபத்துக்குள்ளாகிய இருவாகனங்களும் வவுனியா பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டடுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

தகவல்  இ.தர்சன்

SHARE