வவுனியா புளியங்குளத்திலிருந்து நெடுங்கேணி பிரதேசத்துக்கு செல்லும் அரச
உத்தியோகத்தர்கள் நீண்ட நேரம் புளியங்குளத்தில் காவல் நிற்கவேண்டிய
நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
புளியங்குளத்திலிருந்து நெடுங்கேணி செல்லும் பேரூந்துகள் 7.00
மணியிலிருந்து 7.50 வரை புளழயங்குளத்தில் நீண்ட நேரம் தாமதிப்பதனால்
பாடசாலைகளுக்கே பிரதேச செயலகத்துக்கோ வங்கிகள் ஏனைய தினைக்களங்களுக்கு 8.30
மணிக்குள்ளே செல்லமுடியாத நிலைக்கு அரச உத்தியோகத்தர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இதனை வவுனியா தனியார் பேரூந்து சங்கமோ இலங்கை போக்குவரத்து வவுனியா
சாலையோ உரிய கவனம் எடுத்து 7.30 மணிக்கு புளியங்குளத்துக்கூடாக
நெடுங்கேணிக்கு செல்வதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு வந்து
உத்தியோகத்தரின் பிரச்சனைக்கு உடனடித்தீர்வினை பெற்றுத்தரும்படி கோரிக்கை
விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கோபிகா.