வவுனியா புளியங்குளம் பிரதேச வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவு முதலமைச்சரால் திறந்து வைப்பு..!

148

வவுனியா புளியங்குளம் பிரதேச வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவு இன்று வடமாகாண முதலமைச்சர் சிவி.விக்னேஸ்வரனால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

சுகந்திர சுகாதார சேவையினை வலுப்படுத்தும் நோக்கில் முன்மாதிரியாக கொண்டு எய்ட்ஸ், சலரோகம், மலேரியா நோய்களை அழித்தொழிப்பதற்கான கருத்திட்ட உலக நிதியத்தின் கீழ் சுமார் இருபத்தாறு மில்லியன் ரூபா செலவில் இக்கட்டடம் கட்டப்பட்டது.

இவ்வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவு கட்டடத்தினை வடமாகாண முதலமைச்சர் சிவி.விக்னேஸ்வரன் திற்ந்து வைத்தார்.

இந்நநிகழ்வில் வடமாகாண சுகாதார அமைச்சர் ஞா.குணசீலன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர்ச.சிவமோகன், வடமாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி கேதீஸ்வரன், பிராந்திய சுகாதார சேவை உதவிப்பணிப்பாளர் வைத்தியகலாநிதி மகேந்திரன், வவுனியா வைத்தியசாலை பணிப்பாளர் கு.அகிலேந்திரன் மற்றும் வைத்திய அதிகாரிகள், பொது சுகாதர பரிசோதகர்கள், வைத்தியசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர் உட்பட பலரும் கலந்த கொண்டிருந்தனர்.

 

 

 

 

 

SHARE