வவுனியா வடக்கு சமுர்த்தி உத்தியோகத்தர் மீது வீடு புகுந்து தாக்குதல் நடத்திய நபர் மடக்கிப் பிடிப்பு

201

சமுர்த்தி  உத்தியோகத்தர்  மீது நேற்று இரவு வீடு புகுந்து  தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் தாக்குதல் மேற்கொண்டவர்களில் ஒருவரை சமுர்த்தி உத்தியோகத்தரின் வீட்டார் சேர்ந்து மடக்கிப்பிடித்துள்ளனர்.

வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தில் பணிபுரியும் சமுர்த்தி உத்தியோகத்தர் கடமை விட்டு வீடு நோக்கி சென்றுகொண்டிருந்தபோது இளைஞர்கள் சிலர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இந் நிலையில் சமுர்த்தி உத்தியோகத்தர் பொலிஸில் முறைப்பாட்டை பதிவு செய்த பின்னர் மீண்டும் வீடுநோக்கிச்சென்றபோது மீண்டும் வீட்டுக்குள் புகுந்து தாக்கியுள்ளனர்.

இதன்போது தாக்கியவர்களை வீட்டார் பிடித்து வைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE