வித்தியாவின் கொலை வழக்கில் ஆஜராகிய பிரபல சட்டத்தரணி திரு.கே.வி.தவராசா வித்தியாவின் கொலை வழக்கில் இருந்து விலகுவதாக தெரிவித்து உள்ளாரென அறிய வருகிறது.

299

புங்குடுதீவு மாணவி சகோதரி வித்தியாவின் கொலை வழக்கில் ஆஜராகிய பிரபல சட்டத்தரணி திரு.கே.வி.தவராசா அவர்களுக்கு எதிராக விசமப் பிரச்சாரம் செய்து வந்த அரசியல்வாதி ஒருவரின் சுயநல செயல்பாட்டை புரியாது, புங்குடுதீவு பிரபல வர்த்தகர்களென (கொழும்பு) தம்மை அழைத்துக் கொள்ளும் சிலர், அந்த அரசியல்வாதி, & வித்தியாவின் குடும்பத்துடன் இணைந்து பிரபல சட்டத்தரணி திரு.கே.வி.தவராசா அவர்களை இந்த வழக்கில் இருந்து ஒதுங்க வைக்க முயற்சியெடுத்து சில காரியங்களைப் புரிந்து உள்ளனர்.

அச்செயற்பாடுகளின் பிரதிபலிப்பாக திரு.கே.வி.தவராசா அவர்கள் தாமாகவே இந்த வித்தியாவின் கொலை வழக்கில் இருந்து விலகுவதாக தெரிவித்து உள்ளாரென அறிய வருகிறது.

இவ்வழக்கில் ஏன் இந்த திசை திருப்பம்?? இந்த வழக்கின் தீர்ப்பும், முடிவுகளும் எவ்வாறு அமையப் போகின்றது? என்பது கேள்விக்குறியாக உள்ளதோடு, குற்றவாளிகளும் தப்பிக்க விடப்படலாம் என்பதுவும் சந்தேகத்துக்கு உரியதாகவே உள்ளது! என்ன கொடுமை இது?!…
m

SHARE