வித்தியாவின் படுகொலை! 2ம் கட்ட விசாரணை! – சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி. தவராஜா

263
புங்குடுதீவு மாணவி வித்தியா பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பான 2ம் கட்ட விசாரணைகள் இன்று நடைபெற்றுள்ளன.

வித்தியாவின் தாய், அவரது சகோதரன் நிஷாந்தன், ஊர்காவற்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, சட்டவைத்திய அதிகாரி மற்றும் புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் சாட்சியமளித்ததாக சிரேஷ்ட சட்டத்தரணி வி. தவராஜா லங்காசிறியின் 24 செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.

சம்பவத்துடன் தொடர்புடைய 9 சந்தேக நபர்களையும் ஒரு மாதம் தடுப்பு காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

SHARE