வீட்டின் தோட்டத்தில் திடீரென உருவான பள்ளம்: அதிர்ச்சியில் உறைந்த குடும்பம் (வீடியோ இணைப்பு)

269
பிரித்தானியாவில் வீட்டு தோட்டம் ஒன்றில் திடீரென்று உருவான பள்ளத்தினால் அந்த குடும்பம் அதிர்ச்சி அடைந்துள்ளது.பிரித்தானியாவின் Aylesbury பகுதியில் குடியிருந்து வருபவர் உதவி ஆசிரியராக பணியாற்றிவரும் எம்மா ஜேம்ஸ்.

இவர் தனது வீட்டின் தோட்டத்தில் உள்ள புல்வெளியை சமச்சீராக்குவதில் ஈடுபட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது குறிப்பிட்ட பகுதியில் திடீரென சின்னதாக ஒரு பள்ளம் ஏற்பட்டுள்ளதை அவர் கவனித்துள்ளார்.

இதனையடுத்து அந்த பள்ளத்தில் அருகாமையில் இருந்த பகுதியை நீக்கிய அவருக்கு, திடீரென அந்த பகுதி பள்ளமாக மாறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

7 அடி ஆழம் கொண்ட அந்த பள்ளமானது ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட கான்கிரீட் தொட்டியாக இருக்கலாம் என தெரிய வந்துள்ளது.

1984 ஆம் ஆண்டில் இருந்தே இந்த வீட்டில் குடியிருந்து வரும் எம்மா குடும்பத்தினர், தங்கள் வீட்டு தோட்டத்தில் இப்படி ஒரு தொட்டி மறைந்திருப்பதை அறியவில்லை என்கின்றனர்.

வீட்டை கட்டி முடித்து வழங்கிய நிறுவனமும் இதுகுறித்து தங்களிடம் தெரிவிக்கவில்லை என்று கூறியுள்ள எம்மா, உடனடியாக இது குறித்து உள்ளூர் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.

35 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட கழிவு நீர் தொட்டி என்பதை அவர்கள் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டார்.

இதனையடுத்து அந்த பள்ளத்தில் வேறு எவரும் அறியாமல் விழுந்துவிடாமல் இருக்க மரக்கட்டைகளை வைத்து மூடியுள்ளனர்.

SHARE