வெடிகுண்டுடன் புத்தளத்தில் நபர் ஒருவர் கைது

223
புத்தளம் , தில்ஹடிய பிரதேசத்தில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டு ஒன்றுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபரின் வீட்டில் இருந்து நேற்றைய தினம் இந்த வெடிகுண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் சிலாபம், நாதன்டிய பிரதேச வீடொன்றில் இருந்து ரவைகள் மற்றும் ஐந்து துப்பாக்கிகளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் காலி, அம்பலாங்கொடை பிரதேசத்தில் இந்த நாட்டில் தயரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

SHARE