படைத்துறையினரின் ஆளணி எண்ணிக்கையைப் பொறுத்தவரை சீனா உலகிலேயே பெரிய படையணியைக் கொண்ட நாடாகும்

875

 

7cc19-under-water-missiles

2013-ம் ஆண்டு ஜூலை மாதம் 14-ம் திகதி காலை ஒரு வழிகாட்டி ஏவுகணை நாசகாரிக் கப்பல் உட்பட ஐந்து சீனக் கடற்படைக் கப்பல்கள் இரசியாவிற்கும் ஜப்பானிற்கும் இடைப்பட்ட பன்னாட்டுக் கடலினூடாக முதல் தடவையாகப் பயணம் செய்தது. இது ஜப்பானுக்கு சீனா காட்டும் பூச்சாண்டியாகவே பார்க்கப்பட்டது.

. அதன் படையினரின் எண்ணிக்கை 22 இலட்சமாக இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.அத்துடன் அது தனது பாதுகாப்புச் செலவைக் கூட்டிக் கொண்டே போகிறது.

பொதுவாக சீன ஆட்சியாளர்கள் தம் நாட்டைப்பற்றிய தகவல்களை இரகசியமாகவே வைத்திருப்பது வழக்கம். அதிலும் படைவலு பற்றிய தகவல்கள் மிகவும் இரகசியமாகவே சீனா காப்பாற்றி வருகிறது. ஒரு நாட்டின் தேசிய எல்லையையும் ஆதிக்க எல்லையையும் அதன் படைவலுவே தீர்மானிக்கிறது. சீனாவின் ஆதிக்க எல்லையை மற்ற நாடுகள் ஏற்றுக் கொள்ளவும் மதிக்கவும் சீனாவின் படைவலுவைப் பற்றி மற்ற நாடுகள் சரியாக அறிந்து வைத்திருப்பது சீனாவிற்கு நன்மை தரக்கூடியது என்பதை சீனா உணர்ந்துள்ளது. ஜப்பானியக் கடல் எல்லைகளில் சீனக் கடற்படைக் கப்பல்களின் நடமாட்டம் ஜப்பானை அச்சுறுத்தக் கூடியது என ஓய்வு பெற்ற சீனக் கடற்படை அதிகாரி தெரிவித்திருந்தார். கிழக்குச் சீனக் கடலில் உள்ள தீவுகள் யாருக்கு சொந்தம் என்பதில் சீனாவும் ஜப்பானும் கடுமையாக முரண்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் சீனா தனது கடற்படை வலுவை உலகிற்கும் தனது நாட்டு மக்களுக்கும் காட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதிலும் உலக வல்லரசுகளில் எந்த ஒரு கடற்போரிலும் ஈடுபடாத சீனக் கடற்படை வலுவைக் காட்ட வேண்டிய நிர்ப்பநநதம் சீனாவிற்கு ஏற்பட்டுள்ளது.

சீனா தனது நீர்மூழ்கிக் கப்பல்கள் எந்த ஒரு விபத்திலும் கடந்த 40 ஆண்டுகளாக ஈடுபடவில்லை என மார்தட்டிக் கொள்கின்றது. தனது பாதுக்பாப்பு முன்னேற்பாடுகள் அந்த அளவிற்கு உயர் தரம் வாய்ந்தது என்கிறது சீனா.
கடந்த சில தினங்களாக சீன அரசு ஊடகங்களில் சினாவின் கடற்படை பற்றிய செய்திகளும் கட்டுரைகளும் வெளிவந்தன. சீனாவின் மூன்று கடற்படைப் பிரிவுகளும் இணைந்து ஒரு பயிற்ச்சியில் ஈடுபட்டன. இதில் சினாவின் பழைய சியா வகை நீர்மூழ்கிக் கப்பல்கள் பகிரங்கப்படுத்தப்பட்டன. சினாவின் புதிய ஜின் வகை நீர்முழ்கிக் கப்பல்கள் இதில் காட்டப்படவில்லை. சீனா தனது நீர் மூழ்கிக் கப்பல் வலுவையே இந்தப் பயிற்ச்சி நடாத்தப் பட்டது. சீனா 1970-ம் ஆண்டிலிருந்து தனது நீர்மூழ்கிக் கப்பல்களை அபிவிருத்தி செய்து வருகின்றது. உலகிலேயே வலுமிக்க அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல்களை சமாளிக்கக் கூடிய வகையில் சீனா தனது நீர் மூழ்கிக் கப்பல்களையும் ஏவுகணைகளையும் உருவாக்கி வருகின்றது. சீன ஊடகமான Global Times சீனப் படைவலுவை மற்ற நாடுகள் கணக்கில் எடுக்க வேண்டும் எனக் கூறுகிறது:

“China is powerful in possessing a credible second-strike nuclear capability. Some countries haven’t taken this into serious consideration when constituting their China policy, leading to a frivolous attitude toward China in public opinion.”

சீனா தற்போது இரண்டு Type-94வகை Ballistic ஏவுகணைகளை ஏவக்கூடிய நீர் மூழ்கிக் கப்பல்களை வைத்திருக்கின்றது. இவை ஒவ்வொன்றும் ஒரேயடியாக 12 ஏவுகணைகளை வீசக் கூடியவை.  அவற்றின் பாய்ச்சல் தூரம் 7000 முதல் 13000கிலோ மீட்டர்கள் அதாவது 4300முதல் 8100 மைல்கள் சென்று தாக்கக் கூடியவை. சீனா இப்போது நான்கு புதிய வகை நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கி வருகின்றது. இவை Type-96வகையைச் சார்ந்தவை. இவற்றால் 16 முதல் 24 வரையிலான Ballistic ஏவுகணைகளைத் தாங்கிச் செல்ல முடியும். சீனாவிடம் 200முதல் 240 வரையிலான அணுக்குண்டுகள் இருக்கின்றன என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் சீனாவிடம் மூன்று கடற்படைப் பிரிவுகள் மட்டுமே இருக்கின்றன. இந்தியாவிடம் நான்கு பிரிவுகளும் ஜப்பானிடம் ஒரு பிரிவும்  அமெரிக்கா, பிரிதானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஒவ்வொன்றும் ஆறு பிரிவுகளை வைத்திருக்கின்றன. அமெரிக்கா தனது கடற்படைக்கு Ford வகை விமானம் தாங்கிக் கப்பல்களை இணைந்த பின்னர் சினாவின் கடற்படை அமெரிக்கக் கடற்படைக்கு கிட்டவும் நிற்க முடியாத நிலை ஏற்படும்.

பலவீனமான சீன விமானப்படை
அமெரிக்காவின் விமானப் படையுடன் ஒப்பிடுகையில் சீன விமானப்படை பலவீனமானதே. எண்ணிக்கை அடிப்படையில் அமெரிக்காவிடம் சீனாவிடம் இருப்பதிலும் பார்க்க மூன்று மடங்கு போர் விமானங்கள் இருக்கின்றன. சீனாவின் விமானப்படையின் தரமும் படையினரின் போர் அனுபவமும் அமெரிக்காவுடன் ஒப்பிடுகையில் தாழ்ந்து இருக்கின்றன. சீனா தனது விமான எந்திரங்களுக்கு இப்போதும் சோவியத் யூனியனின் தொழில் நுட்பத்திலேயே தங்கி இருக்கின்றது. அதன் உள்ளூர் விமான எந்திரத் தொழில் நுட்பம் மிகவும் பின் தங்கிய நிலையிலேயே இருக்கின்றது.

சீன விமானம் தாங்கிக் கப்பல்
அமெரிக்காவிடம் பத்து விமானம் தாங்கிக் கப்பல்கள் இருக்கின்றன. மிக நவீன மயப்படுத்தப் பட்ட மேலும் இரு போர்ட் வகை விமானம் தாங்கிக் கப்பல்களை விரைவில் அமெரிக்கா சேவையில் ஈடுபடுத்த இருக்கிறது. சீனாவிடம் தற்போது ஒரே ஒரு விமானம் தாங்கிக் கப்பல் இருக்கின்றது. சீனா விரைவில் மேலும் இரண்டு விமானம் தாங்கிக் கப்பல்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.
அமெரிக்கா எப்படிச் சமாளிக்கும்?
சோவியத்துடனான பனிப் போரின் போது அமெரிக்கக் கடற்படை உலகெங்கும் கடலுக்கடியில் பல ஒலி உணரிகளைப் பொருத்தி வைத்திருந்தது. அவை இரசியக் நீர்மூழ்கிக் கப்பல்களின் நடமாட்டத்தை துல்லியமாக உணரக் கூடியவை. இரசியாவின் நீர் மூழ்கிக் கப்பல்களுடன் ஒப்பிடுகையில் சீன நீர் மூழ்கிக் கப்பல்கள் இரைச்சல் மிகுந்தவை என்பதால் அவற்றைக் கண்டறிதல் இலகுவானதாகும். அமெரிக்காவும் ஜப்பானும் இணைந்து சீனாவின் நீர் மூழ்கிக் கப்பலகளை கண்டறியக் கூடிய நிலைகளை சீனாவைச் சுற்று உருவாக்கியுள்ளன. அமெரிக்காவிற்கு அணுக் குண்டு தாங்கிய நீர்மூழ்கிக் கப்பலகளின் அசைவுகளைக் கண்டறியும் அறுபது ஆண்டு அனுபவம் உண்டு. சீன நீர் மூழ்கிக் கப்பல்கள் தமது நிலையில் இருந்து அசையத் தொடங்கியதில் இருந்து அவற்றின் நடமாட்டம் கண்டறியப்பட்டு அவை தண்ணீருக்கு அடியில் செல்லக் கூடிய ஏவுகணைகளை வீச முன்னர் அவற்றின் மீது தாக்குதல் தொடுக்கக் கூடியவகையில் அமெரிக்கா தனது தொழில் நுட்பத்தை வளர்த்துள்ளது.அத்துடன் அமெரிக்கப் பாதுகாப்புத் துறையான பெண்டகன் அடுத்த தலைமுறை நீருக்கடி ஒலி உணரிகளை உருவாக்கி வருகின்றது. அவற்றால் சீன நீர்மூழ்கிக் கப்பல்களின் நடமாட்டத்தை மேலும் துல்லியமாக அவதானிக்கக் கூடியதாக இருக்கும்.

சீனா தனது வலுவைக் காட்டி தனது அயல் நாடுகளை மிரட்டினால் அவை யாவும் சீனாவிற்கு எதிரான ஒரு படைக் கூட்டமைப்பை உருவாக்குவதுடன் அதற்கு அமெரிக்காவை தலைமை தாங்க வைக்கலாம். இது அமெரிக்கா தனது படைத் தளங்களை சீனாவைச் சுற்றி அதிகரிக்கச் செய்வதுடன் அமெரிக்காவின் படைக்கல விற்பனையை அதிகரிக்கச் செய்யும்.  விளைவு சீனாவிற்கு சாதகமாக இருக்காது.

 

SHARE