ஷேவாக்கை விட எனது தலையில் அதிக முடி உள்ளது: மேக்ஸ்வெல் கிண்டல்

265

 

அவுஸ்திரேலிய அணியின் அதிரடி வீரரான மேக்ஸ்வெல் முன்னாள் இந்திய வீரர் ஷேவாக்கை கிண்டலடித்து பேசியுள்ளார்.

இந்தியா- அவுஸ்திரேலியா அணிகள் மோதிய 3வது ஒருநாள் போட்டியில் நேற்று மெல்போர்னில் நடைபெற்றது.

இதில் மேஸ்வெல்லின் சிறப்பான ஆட்டத்தில் அவுஸ்திரேலியா 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

இந்தப் போட்டியில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திய மேக்ஸ்வெல் 83 பந்தில் 96 ஓட்டங்க
ள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் அவர் சதத்தை தவறவிட்டார்.

இது குறித்து மேக்ஸ்வெல் கூறுகையில், ”துணைக் கண்டத்தில் உள்ள சில வீரர்கள் தனிப்பட்ட சாதனைகளுக்காக விளையாடுகின்றனர்.

நான் கவர்ச்சிகரமான துடுப்பாட்ட வீரராக இருக்க விரும்பவில்லை. போட்டியை சிறந்த முறையில் முடித்தால் போதுமானது” என்று கூறியுள்ளார்.

மேலும், ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியின் சக வீரரான ஷேவாக் பற்றி அவர் கூறுகையில், “எனக்கு அவரை விட தலையில் அதிகமாக முடி இருக்கிறது.

நான் டெல்லி அணியில் இருந்த போது எனது நாட்டு சக வீரரான ஆரோன் பிஞ்ச் உடன் அவர் தொடக்க வீரராக களமிறங்குவார். அப்போது அவருடன் அதிகம் பேசுவேன்.

பின்னர் இருவரும் பஞ்சாப் அணிக்காக விளையாடினோம். அவருடன் பஞ்சாப் அணியில் விளையாடிது எனது அதிர்ஷ்டம். அவர் எப்போதும் கூலாகவே இருப்பார்“ என்று கூறியுள்ளார்.

SHARE