ஸ்மித்- டோனி ரகசியத்தை பற்றி கூறிய ஸ்டோக்ஸ்

143

சர்வதேச அணிகள் விளையாடும் போது தான், டோனி, ஸ்மித் பகையாளிகள் தற்போது அவர்கள் அண்ணன், தம்பி என இங்கிலாந்து அணியைச் சேர்ந்த பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார்.

இந்தியாவில் தற்போது 10-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் லீக் போட்டிகள் முழுவதுமாக முடிந்த நிலையில், பிளே ஆப் சுற்றுகளுக்கு மும்பை, புனே, ஹைதராபாத், கொல்கத்தா அணிகள் தகுதி பெற்றுள்ளன.

இதில் புனே அணி, ஆரம்பத்தில் தடுமாறியது, அதன் பின் சீனியர் வீரர்களின் சீற்றத்தால் தற்போது இரண்டாவது இடத்திற்கு உயர்ந்துள்ளது.

இதற்கு அந்த அணியின் டோனி, ஸ்மித், ஸ்டோக்ஸ், உள்ளிட்ட சீனியர் வீரர்களின் ஒத்துழைப்பே காரணம்.

இந்நிலையில் ஸ்டோக்ஸ் புனே அணி வீரர்களான ஸ்மித், டோனி குறித்து கூறுகையில், போட்டிக்கு பின் டோனி தனது அறையின் கதவை எப்போதுமே திறந்து தான் வைத்திருப்பார். யார் வேண்டுமானாலும் தயங்காமல் உள்ளே செல்லலாம்.

அதே போல களத்திலும் டோனியின் அமைதியான முகமே அத்தனை கதைகளையும் சொல்லிவிடும்.

ஸ்மித் தலைவராக இருந்த போதும் பொறுத்தமான இடத்திற்கு பீல்டர்களை டோனி மாற்றி அமைப்பார்.

அவர்களுக்கு எந்த ஈகோவும் இல்லை, பகையாளிகளாக இருந்தாலும் தற்போது அவர்கள் அண்ணன் தம்பி போல் உள்ளனர் என்று கூறியுள்ளார்.

SHARE