2ஆம் இணைப்பு – முன்னாள் படைத்தளபதிகளிடம் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு விசாரணை

263

முன்னாள் படைத்தளபதிகளிடம் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர். கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் பதவி வகித்த முக்கிய படைத் தளபதிகள் இவ்வாறு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் இராஜதந்திர சேவையில் ஈடுபட்டிருந்த போது, மேற்கொண்ட அரசியல் செயற்பாடுகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது. குறிப்பாக தேர்தல் காலங்களில் இவ்வாறு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
முன்னாள் இராணுவத் தளபதி சாந்த கோட்டேகொட, முன்னாள் விமானப்படைத் தளபதி ஜயலத் வீரக்கொடி, முன்னாள் கடற்படைத் தளபதிககளிடம் வசந்த கரன்னாகொட, அட்மிரல் திசாரசமரசிங்க ஆகியோரிடம் இவ்வாறு விசாரணை நடத்தப்பட்டுள்ளது. மேலும் மேஜர் ஜெனரல்ஜகத் குமார விஜயசிறி என்ற அதிகாரியும் விசாரிக்கப்பட்டுள்ளார்.
கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் பல படையதிகாரிகள் ராஜதந்திர சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டனர். இவ்வாறு இணைத்துக் கொள்ளப்பட்டவர்கள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும், தேர்தல் காலங்களில் கட்சிக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

SHARE