5 மகன்மாரை பெற்றெடுத்த தந்தை வீதியில் அநாதையாக இறந்த பரிதாபம்

167

மஹரகமை பிரதேசத்தில் இருந்து கதிர்காமத்திற்கு நடந்து சென்றதாக கூறப்படும் ஒருவர் காலி நகரில் கடை ஒன்றுக்கு அருகில் இறந்துள்ளார்.

இறந்த நபரின் அருகில் மஹரகமை புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்ததாக தெரிவித்து எழுதிய கடிதம் ஒன்று பொலிஸாருக்கு கிடைத்துள்ளது.

மஹரகம ஆசிரி என்று எழுதப்பட்ட பிரசுரம் ஒன்றும் இறந்த நபரிடம் இருந்து கிடைத்துள்ளது. “எனது பெயர் ஜோசப் என்டனி. எனக்கு புற்றுநோய் உள்ளது. சிறுநீரகங்கள் கெட்டு போய்விட்டன.

பேசுவது சிரமம். 2016ஆம் ஆண்டு மஹரகமை மற்றும் கராப்பிடிய வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றேன். மருத்துவர் விஜேபால-மகரகமையில் சத்திர சிகிச்சை செய்ய மூன்று லட்சம் ரூபா கோருகிறார்” என அந்த பிரசுரத்தில் எழுப்பட்டுள்ளது.

இறந்த நபர் ஒரு மாதத்திற்கு மேலாக மஹரகமையில் இருந்து கதிர்காமத்திற்கு நடந்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இறந்த நபரிடம் இருந்து கிடைத்த கடிதத்தில், எனது பெயர் ஜோசப் என்டனி. எனக்கு தொண்டையில் புற்றுநோய் உள்ளது. மனைவி என்னை விட்டு பிரிந்து சென்று விட்டார். ஐந்து மகன்மார் இருக்கின்றனர்.

அவர்கள் என்னை கவனிப்பதில்லை என கடிதத்தில் கூறியுள்ளார். கடந்த மாதம் 9 திகதி இந்த நபர் மஹரகமையில் இருந்து பயணத்தை ஆரம்பித்ததாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

SHARE