7 மாதமாக 15 பேரால் பலாத்காரம் செய்யப்பட்ட 7 ஆம் வகுப்பு மாணவி.!

434

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான பாலியல் ரீதியிலான குற்றச்செயல்களும், வன்முறைச் சம்பவங்களும் அதிகப்படியாக நிகழ்ந்துவருகின்றன. அரசு சார்பில் வெளியிடப்படும் புள்ளிவிவரங்கள் இதனை உறுதிப்படுத்துவது நமக்கு அதிர்ச்சியளிக்க கூடிய சூழலில் தற்போது கேட்பவர்களை மிகுந்த அதிர்ச்சி உள்ளாக்கும் ஓர் சம்பவம் தமிழகத்தில் நிகழ்ந்துள்ளது.

சென்னையில் 7 ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவிக்கு மயக்க ஊசி போட்டு 7 மாதங்களாக 15 பேர் தொடர்ந்து பலாத்காரம் செய்து வந்த சம்பவம் குலை நடுங்கச் செய்துள்ளது. சென்னை அயனாவரம் மகளிர் காவல்நிலையத்தில் இன்று ஒருபெண் புகார் ஒன்றை அளித்து உள்ளார். அந்த புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்தப் புகாரில் சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 7ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி, குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் காது கேட்காத, சரியாக வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி எனக் கூறப்படுகிறது.

சிறுமி தனியாக இருக்கும் நேரங்களில், அடுக்குமாடி குடியிருப்பின் காவலர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த விவகாரம் கடந்த ஜனவரி மாதம் நடந்துள்ளது. காவலரை தொடர்ந்து சுமார் 15 பேர் மாற்றுத்திறனாளி சிறுமியை பலாத்காரம் செய்துள்ளனர். நாளுக்குநாள் சிறுமியின் உடல்நிலை மோசமடைந்து வரவே சிறுமியின் தாயார் சிறுமியிடம் சைகை ரீதியாக கேட்டு விவகாரத்தை தெரிந்துகொண்டதாக தெரிகிறது.

அதனை தொடர்ந்து அடுக்குமாடி குடியிருப்புக்கு விரைந்த காவல்துறையினர், அங்கிருந்த காவலர்கள் உள்ளிட்ட 3 பேரை பிடித்து விசாரித்தனர். போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் உண்மையை கக்கிய நிலையில் காவலாளிகள், பிளம்பர், லிப்ட் ஆபரேட்டர், தண்ணீர் கேன் போடுபவர் என 18 பேர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாய் பேச இயலாத சிறுமையை கூட பாலியல் கண்ணோட்டத்துடன் அணுகி மிருகங்களை போன்று நடந்துகொண்டுள்ள மேற்கொண்டோரை கடுமையாக தன்னடிக்க வேண்டும் என்பதுவே மக்களை கோரிக்கையாக உள்ளது.

SHARE