வாழ்நாள் முழுவதும் சிறிலங்காவை கட்டுப்படுத்தும் முயற்சியில் பலம் வாய்ந்த நாடுகள்

195

 

மனித உரிமையை ஆயுதமாக பயன்படுத்தி சிறிலங்காவை வாழ்நாள் முழுவதும் கட்டுப்படுத்த பலம் வாய்ந்த நாடுகள் முயற்சிப்பதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கடுமையாக சாடியுள்ளார்.

இவ்வாறான நிலையில், சிறிலங்கா தொடர்பான மற்றுமொரு பிரேரணை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.

எனவே பலம் வாய்ந்த நாடுகள் கூட்டாக இந்த பிரேரணையை சமர்ப்பித்துள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரும் அதிபர் சட்டத்தரணியுமான அலி சப்ரி தெரிவித்தார்.

இதேவேளை, அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, வடக்கு அயர்லாந்து, வடக்கு மசிடோனியா, ஜெர்மன், மலாவி மற்றும் லக்சம்பர்க் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய கோர் குழு அறிக்கை வெளியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

SHARE