திரைதுறையில் 20 ஆண்டுகளை நிறைவு செய்த அல்லு அர்ஜுன்

100

2003ம் ஆண்டு வெளியான கங்கோத்ரி படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமானவர் அல்லு அர்ஜுன். அதன் பின்னர் ஆர்யா, பருகு, வேதம், ரேஸ் குர்ரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

சமீபத்தில் சுகுமார் இயக்கத்தில் வெளியான புஷ்பா படத்தில் நடித்து இந்திய அளவில் பிரபலமடைந்தார். தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வருகிறார். பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அல்லு அர்ஜுன் திரைத்துறைக்கு அறிமுகமாகி 20 ஆண்டுகள் கடந்துள்ளதை அவர் சமூக வலைத்தளத்தின் வாயிலாக நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். அவர் குறிப்பிட்டிருப்பது, இன்றுடன் நான் திரையுலகில் 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளேன்.

உண்மையில் நீங்கள் காட்டிய அன்பினால் நான் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறேன். நான் திரைதுறையில் இருக்கும் அனைவருக்கும் கடமைப்பட்டிருக்கிறேன். நான் யார் என்பதை நீங்கள் காட்டிய அன்பு மற்றும் நம்பிக்கை மீது தெரிந்துகொண்டேன் என்று பதிவிட்டுள்ளார்.

maalaimalar

SHARE