முகநூலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அவதூறு செய்த அரசியல்வாதிக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் பொது வேட்பாளராக போட்யிடியிட்ட தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இழிவுபடுத்தும் வகையில் முகநூலில் தகவல் வெளியிட்டதாக தென் மாகாணசபை உறுப்பினர் சம்பத் அதுகோரல மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த சந்தேக நபரை கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலபிட்டிய பிணையில் செல்ல அனுமதித்துள்ளார்.
10000 ரூபா ரொக்கப் பிணையிலும் தலா 500, 000 ரூபா அடிப்படையிலான இரண்டு சரீரப் பிணையிலும் இவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அவதூறு ஏற்படும் வகையில் முகநூலில் தகவல்களை பிரசுரிக்க உதவி செய்த இருவர் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளதாக புலானய்வுப் பிரிவினர் நீதவானிடம் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதியை மைத்திரிபால சிறிசேனவையும் பெண் ஒருவரையும் தொடர்புபடுத்தி இந்த முகநூல் பதிவு பிரசுரிக்கப்பட்டிருந்தது.