பட்டப்பகலில் மலேசியாவில் இளம் தமிழ்க் குடும்பப் பெண்ணுக்கு கொடூர வாள் வெட்டு

238

மலேசியாவைச் சேர்ந்த தமிழ் பெண்ணொருவர் அவரது கணவர் மற்றும் நண்பரால் வாளால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

டி.மேகலா எனப்படும் 24 வயதான யுவதியே பலர் முன்னிலையில் கொடூரமாக வெட்டப்பட்டுள்ளார்.

அவரது கணவன் கே.சரவணன் (26) மற்றும் கணவரது நண்பன் அஹமட் லத்தீப் (23) ஆகியோராலேயே அவர் வெட்டப்பட்டுள்ளார்.

அப்பெண் தற்போது வைத்தியசாலையில் அதி தீவிரசிகிச்சைப் பிரிவில் உள்ளதாக தெரியவருகின்றது.

சந்தேகநபர்கள் இருவரும் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளனர். தாக்குதலுக்கான காரணம் இதுவரை உறுதியாகாத போதிலும் , விவாகரத்து தொடர்பான முரண்பாடே காரணமென தெரிவிக்கப்படுகின்றது.

மேற்படி சம்பவத்தின் சி.சி.டிவி காணொளியும் வெளியாகியுள்ளது.

SHARE