அரசியல் தீர்வு காணப்படுவதற்கான சூழல் உருவாகியுள்ள நிலையில் பிரிந்து நிற்பது பாரதூரமான பாதகங்களை ஏற்படுத்தும். தேசிய இனப்பிரச்சினைக்கான நீடித்து நிலைத்திருக்கக்கூடிய அரசியல் தீர்வு பெறுவதற்கான புனிதமான கடமையில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்கள் வலியுறுத்தி உள்ளார்.
வெறும் சொல்லளவில் மட்டுமே “சமஷ்டி” என்ற சொல்லைக் கொண்ட எந்த வித அதிகாரமும் அற்ற அரைகுறைத் தீர்வுக்கு ஐயா சம்பந்தன் அவர்கள் மேசைக்கு கீழால் பச்சைக்கொடி காட்டியுள்தாக செய்தி ஒன்று கசிந்துள்ளது.
2002 காலப்பகுதியில் நோர்வே மத்தியஸ்துடன் நடந்த பேச்சுக்களின் போது ரணில் அரசு உடன்பட்ட சமஸ்டிக்கு இணையான தீர்வை தற்போது ரணில் மேசையில் போட்டிருந்து, அதற்கு சம்பந்தன் ஐயா பச்சைக்கொடி காட்டியிருந்தால் அதில் ஓர் அர்த்தம் உண்டு.
அதைவிடுத்து எந்த வித அதிகாரமும் அற்ற அரைகுறைத் தீர்வுக்கு எல்லோரையும் ஒன்றிணைய அழைப்பதென்பது தமிழர் நலனை நோக்காக கொண்டதாக இருக்க முடியாது.