ஈராக் தலைநகர் பாக்தாத்தில் ஷியா மதப்பிரிவு மக்கள் செறிந்து வாழும் பகுதியில் இன்று நடத்தப்பட்ட பல்வேறு தாக்குதல்களில் 15 பேர் கொல்லப்பட்டதுடன் . 50-க்கும் அதிகமானோ காயம் அடைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாக்தாத்தின் தென்மேற்கு பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள வர்த்தக தொகுதியில் தற்கொலைக்குண்டுதாரி நடத்திய தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர்.
கிழக்கு பாக்தாத்தில் நடத்தப்பட்ட மற்றொரு தற்கொலைத் தாக்குதலில் 5 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் 15-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.
வடக்கில் ஷபி அல்-போர் பகுதியில் நடத்தப்பட்ட வேறொரு தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டதுடன் . 10-க்கும் அதிகமானோ படுகாயமடைந்தனர்.
இந்த தொடர் தாக்குதல்களை ஐ எஸ் அமைப்பே நடத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்ற போதிலும் எந்தவொரு அமைப்பும் இதுவரை தாக்குதல்களுக்கு உரிமை கோரவில்லை.