A9 வீதியில் புரண்ட கன்டைனர்

198

கண்டி – யாழ்ப்பாணம், A9 வீதியில் இன்று (27) அதிகாலை கொள்கலன் தாங்கிய வாகனமொன்று பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.

அதில் பயணித்த இருவர் காயங்களுடன் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பிலிருந்து ரத்தோட்டை, உக்குவளை பிரதேசத்திலுள்ள மர ஆலை ஒன்றுக்கு மரம் ஏற்றிச் சென்ற கொள்கலன் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக அலவத்துகொட பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில், அளவத்துகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.rack

SHARE