மலையாள நடிகையான காவ்யா மாதவன், படத்தின் இயக்குனரின் தோற்றத்தை பிடிக்காமல் ஒரு படத்திலிருந்து வெளியேறி இருக்கிறார். இதைப் பற்றி அந்த இயக்குனரே சொன்னதுதான் வேதனையான ஒரு விஷயம். மலையாளத்தில் 'சாய்ரா, வீட்டிலுக்குள்ள வழி, ஆகாசதின்டே நிறம், பேரறியத்தவர்' போன்ற படங்களை இயக்கியவர் ஓமியோபதி மருத்துவராக இருந்து இயக்குனரான பிஜுகுமார் தாமோதரன் என்கிற டாக்டர்.பிஜு. இவர் இயக்கிய 'சாய்ரா' திரைப்படம் இந்திய பனோரமாவுக்குத் தேர்வு பெற்ற ஒரு படம். 'வீட்டிலுக்குள்ள...
ரஜினிகாந்த், தீபிகா படுகோனே, சரத்குமார மற்றும் பலர் நடித்து வெளிவந்துள்ள கோச்சடையான் திரைப்படம் வெளியான சில தினங்களுக்குள்ளேயே உலகம் முழுவதும் சுமார் 42 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் நேற்று தெரிவித்தது. ஆனால், தமிழில் மட்டுமே படத்திற்கு நல்ல வரவேற்பு இருப்பதாகவும், மற்ற மொழிகளில் கோச்சடையான் பலமான போட்டியைச் சந்தித்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஹிந்தியில் வெளியான 'ஹீரோபான்டி' படம் கோச்சடையானுக்கு போட்டியாக விளங்குவது போல், இந்திய சினிமாவில் முக்கிய...
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர் பிரசாந்த். பொன்னர் சங்கர், மம்பட்டியான் படங்களுக்கு பிறகு அவர் நடித்து வரும் புதிய படம் 'சாகசம்'. இப்படத்தில் வேலை தேடும் இளைஞராக பிரசாந்த் நடிக்கிறார். இவருடன் முன்னணி நடிகை ஒருவரை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகிறது. பிரசாந்த்தின் அப்பாவாக நாசரும், அம்மாவாக துளசியும் நடிக்கின்றனர். இவர்கள் தவிர தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், லீமா, தேவதர்ஷினி, கோட்டா சீனிவாசராவ், மலேசியா அபிதா,...
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரிஸ் நகரில் இன்று தொடங்குகிறது. களிமண் தரையில் விளையாடுவதில் வல்லவரான ரபெல் நடால் (ஸ்பெயின்) 9–வது முறையாக பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வெல்வாரா என்று டென்னிஸ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர் நோக்கி உள்ளனர். அவர் பிரெஞ்சு ஓபன் பட்டத்தை 2005, 2006, 2007, 2008, 2010, 2011, 2012, 2013, ஆகிய ஆண்டுகளில் வென்று முத்திரை பதித்தார். இந்த முறை...
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்று ஆட்டங்களில் நோவாக் ஜோகோவிச், ஷரபோவா ஆகியோர் வெற்றி கண்டனர். ‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் திருவிழா பாரிஸ் நகரில் நடந்து வருகிறது. இதன் 2-வது நாளான நேற்று ஆட்டம் தொடங்கும் முன்பே மழை பெய்ததால் ஆட்டங்கள் தாமதமாக ஆரம்பமானது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் 2-ம் நிலை வீரர்...
7–வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் 8 அணிகள் பங்கேற்று விளையாடின. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் முதல் 4 இடங்களை பிடித்து பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன. புள்ளிகள் பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்த அணிகள் இறுதிப் போட்டிக்கான தகுதி சுற்றில் மோதும். இதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும். தோற்கும்...
7–வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் முதல் 2 இடங்களை பஞ்சாப், கொல்கத்தா பிடித்தன. 3–வது இடத்தை சென்னை சூப்பர் கிங்சும், 4–வது இடத்தை மும்பை இந்தியன்சும் பிடித்தன. இந்த இரு அணிகளும் மும்பையில் நாளை இரவு 8 மணிக்கு நடக்கும் வெளியேற்றுதல் சுற்று (எலிமினேட்டர்) ஆட்டத்தில் மோதுகின்றன. இதில் தோற்கும் அணி வெளியேற்றப்படும். ஜெயிக்கும் அணி குவாலிபையர் ஆட்டத்தில் தோற்ற அணியுடன் 2–வது தகுதி சுற்று ஆட்டத்தில் மோதும். இதில் வெல்லும் அணி...
இந்திய விளையாட்டு மேம்பாட்டு அக்கடமி (இஸ்பா) சார்பில் 13–வது கோடை கால தடகள பயிற்சி முகாம் சென்னையில் நடந்தது. எஸ்.டி.ஏ.டி.யுடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த முகாமில் 10 வயதில் இருந்து 22 வயது வரை உள்ள 140 பேர் பங்கேற்றனர். இதன் நிறைவு விழாவில் அர்ஜூனா விருது பெற்ற கைப்பந்து பயிற்சியாளர் ஜி.இ.ஸ்ரீதரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக விளையாட்டு இயக்குனர்...
இஸ்லாமியப் பெரும்பான்மையினர் வசிக்கும் இந்தோனேஷியாவில் அதிபர் சுசிலோ பம்பாங் யுதோயோனோ அமைச்சரவையில் மத அமைச்சராக செயல்பட்டு வந்தவர் சூர்யதர்மா அலி ஆவார். மெக்காவிற்கு செல்லும் புனிதப் பயணங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் முறைகேடாக செலவு செய்யப்பட்டிருப்பதாக எழுந்துள்ள புகாரைத் தொடர்ந்து இவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த 2012-13ஆம் ஆண்டிற்கான ஹஜ் புனிதப் பயணத்தின்போது 20 மில்லியன் டாலர் மதிப்பிலான சிறப்பு நிதி தவறான முறையில் கையாளப்பட்டிருப்பதாக அந்நாட்டின் ஊழல்...
தென்கொரியாவின் வடக்கு பகுதியில் கோயாங் நகரம் உள்ளது. அங்குள்ள பஸ்நிலையத்தில் நேற்று திடீரென தீப்பிடித்தது. தீ ‘மளமள’வென பரவியது. இதனால் அங்கு கூடியிருந்த மக்கள் அங்குமிங்கும் ஓட்டம் பிடித்தனர். தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். அப்போது அங்குள்ள கழிவறையில் 7 பேர் உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தனர். இந்த விபத்தில் பலர் காயம் அடைந்துள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. எனவே சாவு...