இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று (02) ஹம்பாந்தோட்டை சூரியவெவ மைதானத்தில் இடம்பெற்றது. போட்டியின் நாணய சுழற்சியை வென்ற ஆப்கானிஸ்தான் அணி, இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்துள்ளது. அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 268 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்ப்பில் சரித் அசலங்க 91 ஓட்டங்களையும் தனஞ்சய த சில்வா...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது காலநிலை மாற்ற பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகிறார். இது அடுத்த ஆண்டு ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
நமது நாடு வளமான நாடாக இருந்தாலும், தற்போது வங்குரோத்து நிலையை அடைந்து விட்டதாகவும், இந்த வங்குரோத்தில் இருந்து மீள்வதற்கு பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்குப் பதிலாக தற்போதைய அரசாங்கம் பொருளாதாரத்தை சுருக்கி வருவதாகவும், வட்டி விகிதங்களை அதிகரிப்பதன் மூலம் வியாபாரங்களையும் அரசாங்கம் முடக்கி வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். நாடு இவ்வாறான நிலையில் இருக்கும் போது தற்போதைய அரசாங்கம் பல்வேறு சட்டதிட்டங்கள் ஊடாக நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைகளை மீறிவருவதாகவும், தற்சமயம் உண்மையை...
இந்த வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் எரிபொருள் விநியோகத்தை தொடருமாறு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் பெற்றோலிய சேமிப்பு முனையத்திற்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர டுவிட்டரில் இதனைத் தெரிவித்துள்ளார். மேலதிக நேரச் செலவுகளைக் குறைக்கும் நோக்கில், கடந்த 4 மாதங்களில் அரசாங்க விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
2022 ஆம் ஆண்டு தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்றம் தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, 31/12/2021 அன்று பணியை முடித்து, ஆசிரியர் இடமாறுதல் கடிதம் பெற்ற அனைத்து ஆசிரியர்களும் ஜூன் 12 ஆம் திகதிக்குள் பணியிடத்துக்குச் சமூகமளிக்க வேண்டும். ஒரு ஆசிரியர் மேல்முறையீடு செய்ய விரும்பினால், தலைமையாசிரியர் பணிக்கு அறிக்கை செய்த பிறகு ஆசிரியர் இடமாறுதல் துறைக்கு மேல்முறையீடு செய்யலாம் என்றும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பில்...
10 அணிகள் இடையிலான 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இந்த போட்டிக்கு சூப்பர் லீக் மூலம் புள்ளிபட்டியலில் டாப்-8 இடங்களை பிடித்த நியூசிலாந்து, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, வங்காளதேசம், இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், தென்ஆப்பிரிக்கா ஆகிய 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுவிட்டன. மீதமுள்ள இரு அணிகளை தேர்வு செய்வதற்கு தகுதி சுற்று போட்டி நடத்தப்படுகிறது....
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி ஜூன் மாதம் 7-ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோத உள்ளன. டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி 2019-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. சவுத்தாம்ப்டனில் நடந்த முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் ஆனது. தற்போது 2-வது டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா விளையாட உள்ளது. ரோகித் சர்மா...
நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக 04 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி மாத்தறை, இரத்தினபுரி, காலி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் சிரேஷ்ட புவிசரிதவியலாளர் வசந்த சேனாதீர தெரிவித்தார். இதன்படி, மாத்தறை மாவட்டம், பிடபெத்தர, குறிப்பாக களுபோவிட்டான பிரதேசங்களில் உள்ள மக்கள் அவதானமாக இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது. இதேவேளை, காலி மாவட்டத்தின் நாகொட மற்றும்...
விமானப்படை பயிற்சி அகாதெமியின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தவறி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அமெரிக்காவின் வரலாற்றில் அதிக வயதுடைய ஜனாதிபதியாக ஜோ பைடன் (வயது 80) உள்ளார். இந்நிலையில், கொலராடோ மாகாணத்தில் உள்ள விமானப்படை பயிற்சி அகாதெமியின் பட்டமளிப்பு விழாவில் ஜோ பைடன் வியாழக்கிழமை கலந்து கொண்டார். அப்போது வீரர்களுக்கு சான்றிதழ் அளிக்க எழுந்தபோது மேடையில் கால் தவறி கீழே விழுந்தார். உடனடியாக அருகிலிருந்து விமானப் படை...
கொரோனா காலத்தில் மக்கள் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டடு மக்கள் டிஜிட்டல் பணபரிமாற்றத்திற்கு சென்றார்கள். பொருளாதார சிக்கலில் சில நாடுகள் சிக்கித் தவித்ததாலும் கிரிப்டோகரன்சியின் பரிமாற்றம் விஸ்பரூபம் அடைந்தது. இதனால் பிட்காய்ன் மதிப்பு பல மடங்கு உயர்ந்தது. இனிமேல் கிரப்டோகரன்சிதான் என்று கூறப்பட்டது. சில நாடுகள் கிரிப்டோகரன்சியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆனால், பொருளாதாரம் சீரடைந்து வரும் நிலையில் கிரிப்டோகரன்சி குறித்த செய்திகள் வெளிவருவது குறைந்துவிட்டது. பாகிஸ்தானில் அரசியல் நிலையற்றத்...