சர்வதேச விசாரணைகள் நடத்தப்படுவது நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் குறித்து நாடாளுமன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்கள் தொடர்பில் இதுவரையில் நீதி நிலைநாட்டப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் சீடர்களே இன்னமும் அதிகாரத்தில் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பூரண விசாரணை நடத்தப்படும் இதன் காரணமாகவே கார்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை...
  வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவின் படி, 2024 ஆம் ஆண்டின் நான்கு மாதங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான 1371 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. முறையான அனுமதியின்றி வெளிநாட்டு வேலைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்தல், சரியான வேலை உத்தரவு இல்லாமல் வெளிநாட்டு வேலைகளை வழங்குவதற்காக பணம் வசூலித்தல், சுற்றுலா விசா மூலம் வெளிநாட்டு வேலைகளுக்கு மக்களை வழிநடத்துதல் போன்ற முறைப்பாடுகள் பணியகத்திற்கு கிடைத்துள்ளன. பணியகத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் 495 முறைப்பாடுகளுக்கு இக்காலப்பகுதியில் தீர்வு காணப்பட்டுள்ளதுடன்,...
  வீதியகொட பிரதேசத்தில் வீடொன்றில் தனியாக இருந்த பெண்ணொருவர் எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஹொரண - வீதியகொட பகுதியில் வசித்து வந்த 63 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளார். குறித்த பெண்ணின் வீட்டின் பக்கத்துவீட்டு நபர் ஒருவரே இந்த குற்றத்தை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.காணி தகராறு குறித்த சந்தேகநபர் வீட்டிற்குள் நுழைந்து வெளியேறிய காணொளி வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது. காணி தகராறு காரணமாக சந்தேகநபர் இவ்வாறு...
  வவுனியா நகரசபையின் முன்னாள் உபநகரபிதாபின் வீட்டில் திருடப்பட்ட ஒரு கோடி ரூபாய் பெறுமதியான 60 பவுண் நகைகள் அவரது வீட்டு கூரையில் இருந்து இன்று மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். பொலிசார் நடவடிக்கை புளொட் அமைப்பின் மத்திய குழு உறுப்பினரான வவுனியா நகரசபையின் முன்னாள் உபநகரபிதா அவர்களின் கோவில்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பகல் 60 பவுண் நகையும், கடவுச் சீட்டு ஒன்றும் திருடப்பட்டுள்ளதாக வீட்டு உரிமையாளரால்...
  வடமாகாண ஆளுநர் செயலகத்தில் ஏற்பட்ட கைக்கலப்பில் ஒருவர் கழுத்தில் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வடமாகாண ஆளுநரின் யாழ்ப்பாணத்தில் உள்ள தலைமை அலுவலகத்தின் அலுவலக பணியாளர் ஒருவருடன், துப்பரவுப் பணியில் ஈடுபடும் நபர் ஒருவர் தாக்குதலில் ஈடுபட்டார். சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஆளுநர் செயலக பணியாளர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளி யாழ்ப்பாண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
  சிங்கள மக்கள் மத்தியில் பிரபல்யமடைந்துள்ள முன்னாள் போராளி தன் உயரத்தின் காரணமாக பிரபலயமடைந்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு கைவேலி கிராமத்தில் வசிக்கும் முன்னாள் போராளியும், இரு பிள்ளைகளின் தந்தையுமான குணசிங்கம் கசேந்திரன் 07 அடி 02 அங்குலம் உயரம் கொண்டவர். உயரத்தால் எழும் பிரச்சனை இலங்கையின் மிக உயரமான நபர் தாம் என நம்புவதாக அவர் பிபிசி சிங்கள சேவையிடம் கூறியுள்ளார். அதோடு தனது உயரம் காரணமாக தாம் எதிர்கொண்ட சூழ்நிலைகள் மற்றும்...
  இலவங்கப்பட்டை ஏற்றுமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் இலத்திரனியல் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான சாத்தியம் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் சீன சிறு மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்கள் சங்கத்துக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (25) நடைபெற்றுள்ளது. இந்த சந்திப்பில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, வாகன உற்பத்தி, விவசாய தொழில்நுட்பம், காகிதம் மற்றும் அச்சிடுதல் தொடர்பான துறைகளில் விரிவாக்கம் மற்றும் வர்த்தக முதலீடுகளில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தொழில்...
  அரச அதிகாரிகள் வேண்டுமென்றே காலதாமதமாக வேலை செய்கின்றனர். வேலை செய்ய முடியாதவர்களை நீக்கிவிட்டு, வேலை செய்யக்கூடிய ஆட்களை பணியில் இணைத்துக்கொள்ள சொல்கின்றேன் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். கம்பஹா மாநகரசபையில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில்,கம்பஹா மாநகரசபையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். அரசாங்கம் அப்படியே இருக்கும் இது தொடர்பில் மேலும் கூறுகையில், ''அரச அதிகாரிகள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் அரசாங்கம்...
  கார் பந்தய விபத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் நிதியுதவி அளிக்க அவசர நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக இலங்கை ஆட்டோமொபைல் ஸ்போர்ட்ஸின் (SLAS) தலைவர்அஷ்ஹர் ஹமீம் (Ashhar Hameem) தெரிவித்துள்ளார். இதேவேளை குறித்த விபத்து தொடர்பில் இலங்கை இராணுவம் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், இந்த துயர சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி தலைமையில் மூவர் கொண்ட சுயாதீன குழுவொன்று இலங்கை ஆட்டோமொபைல் ஸ்போர்ட்ஸினால் (SLAS) நியமிக்கப்பட்டுள்ளது. எந்த தொடர்பும்...
  மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று (26.04.2024) காலை 6 மணியளவில் முறிகண்டி வசந்தநகர் சந்தியின் A9 வீதியில் இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து (Colombo) யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பார ஊர்தியை, அதே திசையில் பயணித்த இராணுவ கப் வாகனம் முந்திச் செல்ல முற்பட்டுள்ளது. விசாரணை இதன்போது குறித்த கப் வாகனம் திடீரென இயங்காமல் நின்றுள்ளதுடன் எதிரே வந்த வாகனம் நேருக்கு நேர்...