சிறுவர் இல்லமொன்றில் பராமரிக்கப்பட்டு வந்த பிள்ளையொன்று காணாமல் போயுள்ளதாக குருநாகல் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பிள்ளை மாதம்பே பகுதியைச் சேர்ந்த 14 வயதுடையது என பொலிஸார் தெரிவித்தனர். பிள்ளை காணாமல் போனமை குறித்து சிறுவர் இல்லத்தின் பாதுகாவலர்கள் பொலிஸில் முறைப்பாடளித்துள்ளனர்.
காணாமல் போன பிள்ளையை கண்டுபிடிக்க குருநாகல் தலைமையக பொலிஸ் பிரிவின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
கல்வி பொது தராதர சாதாரணத் தரப் பரீட்சையானது ஒன்றரை மாதமளவில் தாமதமாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
ஹேமாகம – பிடிபன பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
உயர்தரப் பரீட்சை
இதேவேளை, முன்னதாக நவம்பர் மாதம் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்த கல்விபொதுத் தராதர உயர்தரப் பரீட்சையும் பிற்போடப்பட்டுள்ளதாக அவர் நாடாளுமன்றில் வைத்து குறிப்பிட்டிருந்தார்.
அதன்படி, கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சை நடத்தப்படும்...
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும் அமெரிக்காவின் துணை இராஜாங்க செயலாளர் விக்டோரியா நூலண்டுக்கும் இடையில் நியூயோர்க்கில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பின் போது அமெரிக்காவும் இலங்கையும் பொருளாதார உதவிகள் மற்றும் மனித உரிமைகள் குறித்து கவனம் செலுத்தியுள்ளன.
அமெரிக்க இராஜாங்க செயலாளர் விக்டோரியா நூலண்ட் இந்த விடயம் குறித்து அவரது ’எக்ஸ்’ செயலி பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நாவின் பொதுச் சபைக் கூட்டம்
தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டம் இடம்பெற்று கொண்டிருக்கின்ற...
ஹரின் பெர்னாண்டோவை வெளிநாட்டில் மருத்துவ சிகிச்சை பெறுமாறு மருத்துவர்கள் பரிந்துரைத்ததை அடுத்து அவர் வெளிநாட்டுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் பல நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதே இதற்குக் காரணம்.அதன்படி அமைச்சர் மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு சென்றுள்ளார்.
பல தடவைகள் சத்திரசிகிச்சை
முன்னதாக, முழங்காலின் நிலை காரணமாக பல தடவைகள் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட அவர், அந்த சத்திரசிகிச்சையில் இருந்து மீள்வதற்கு முன்னர், அமைச்சின் கடமைகளிலும் பங்குகொண்டார்.
அந்த நிலைகளால்...
இராஜாங்க அமைச்சர் டயானா கமகேயை பைத்தியம் என்ற ரஞ்சித் : எழுந்துள்ள கடும் எதிர்ப்பு
Thinappuyal News -
டயானா கமகேயை, தமது கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார அவதூறாக பேசியதற்கு சில ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மத்தும பண்டார, நாடாளுமன்றத்தில் இராஜாங்க அமைச்சரை பைத்தியம் என்று அழைத்தார்.
பாலின வெறுப்புப் பேச்சு
இந்த நிலையில், இதுபோன்ற மொழியை பயன்படுத்தப்படுவது மிகவும் ஏமாற்றமளிக்கிறது. எந்த விதமான பாலின வெறுப்புப் பேச்சுக்களையும் கட்சிக்குள் சகித்துக் கொள்ளக் கூடாது என்பதில் தாம் இன்னும் உறுதியாக இருப்பதாக கட்சி உறுப்பினர்...
கோழி இறைச்சியை உள்ளூர் சந்தையில் 850 ரூபா முதல் 900 ரூபாவரை கொள்வனவு செய்ய வாய்ப்பு ஏற்படுமென்று வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கோழி இறைச்சி விலையை 850 ரூபாவுக்கு குறைக்க வேண்டுமென்று கோழிப்பண்ணை உற்பத்தியாளர்களிடம் அமைச்சர் கேட்டுக்கொண்டதுடன், இவ்வாறு செய்யத் தவறும் பட்சத்தில் கோழி இறைச்சியை இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமெனவும், அமைச்சர் கூறியுள்ளார்.
மேலும், உள்ளூர் உற்பத்தியாளர்களின் வர்த்தக நடவடிக்கைகள் வீழ்ச்சியடைவதை...
பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட சரத் ஏக்கநாயக்க விதிக்கப்பட்ட தடை உத்தரவு மேலும் நீடிப்பு!
Thinappuyal News -
சுதந்திரக்கட்சியின் புதிய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட சரத் ஏக்கநாயக்க அந்தப் பதவியில் தொடர்ந்தும் நீடிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு நேற்றைய தினம் (22.09.2023) கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, குறித்த தடையை எதிர்வரும் ( 06.10.2023) ஆம் திகதி வரையில் நீடிக்குமாறு கொழும்பு மாவட்ட நீதிவான் சதுன் விதான உத்தரவிட்டுள்ளார்.
முஸ்லிம்களின் வாக்குகளை இழக்க கூடாது என்பதற்காகவே நல்லாட்சி அரசாங்கம் குண்டுத்தாக்குதலை தடுக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தேசிய பாதுகாப்பு தொடர்பான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இஸ்லாமிய அடிப்படைவாதியான பயங்கரவாதி சஹ்ரான் மீதும் அவரது தரப்பினர் மீதும் கடும் கோபம் எமக்குள்ளது. அதே போல்...
நடிகை சாய் பல்லவி ரகசியமாக திருமணம் செய்துக்கொண்டார் என ஒரு வதந்தி கடந்த சில தினங்களாக பரவி வருகிறது.
அவர் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்து வரும் SK 21 படத்தின் பூஜையில் மாலையுடன் இருக்கும் போட்டோவை crop செய்து சிலர் இப்படி ஒரு வதந்தியை பரப்பி இருக்கின்றனர்.
கோபமான பதிவு
இந்த செய்தி பற்றி தற்போது சாய் பல்லவி கடும் கோபத்துடன் பதிவு ஒன்றை போட்டிருக்கிறார். "எனக்கு வதந்திகளை பற்றி கவலை இல்லை....
செய்தி வாசிப்பாளராக இருந்து நடிகையாக அறிமுகம் ஆனவர் பிரியா பவானி ஷங்கர். அவர் முதலில் சில சீரியல்களில் ஹீரோயினாக நடித்த நிலையில் மேயாத மான் படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆனார்.
தற்போது தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக இருந்து வருகிறார் பிரியா பவானி ஷங்கர்.
அம்மாவுக்கு கேன்சர்
இன்று ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரியா பவானி ஷங்கர் தனது அம்மாவுக்கு கடந்த வருடம் கேன்சர் இருப்பது கண்டறியப்பட்டதாக கூறி கண்கலங்கி இருக்கிறார்.
அது ஆரம்ப...