தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட் பக்கமும் நயன்தாராவின் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஜவான் படத்தின் வெற்றியை தொடர்ந்து அவருக்கு பாலிவுட்டில் பட வாய்ப்புகள் வருவதாக கூறுகின்றனர். நயன்தாரா கைவசம் தற்போது டெஸ்ட் மற்றும் மண்ணாங்கட்டி ஆகிய திரைப்படங்கள் உள்ளன. இதில் டெஸ்ட் படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது என தகவல் வெளியாகியுள்ளது நடிகை நயன்தாரா முதன் முதலில் கதாநாயகியாக பாலிவுட்டில் நடித்த படம் என்றால்...
  கடந்த வாரம் தமிழ் சினிமாவில் இருந்து திரைக்கு வந்த படம் ரத்னம். விஷால் - ஹரி கூட்டணியில் உருவான இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். தாமிரபரணி, பூஜை என இரண்டு வெற்றி திரைப்படங்களை கொடுத்த விஷால் - ஹரி கூட்டணியில் இருந்து ரத்னம் படம் வெளிவந்ததால், இப்படத்தின் மீது மாபெரும் எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்திருந்தனர். வசூல் விவரம் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்று வரும் விஷாலின் ரத்னம் திரைப்படம் மூன்று நாட்கள்...
  நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. விடாமுயற்சி படத்தை தொடர்ந்து அஜித் நடிக்கவிருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி. இப்படத்தை அஜித்தின் தீவிர ரசிகரும், பிரபல இயக்குனருமான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இப்படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் படப்பிடிப்பு மே முதல் வாரம் அல்லது இரண்டாம் வாரத்தில் துவங்கும் என கூறப்படுகிறது. படத்திற்கான நடிகர், நடிகைகள் கேஸ்டிங் தான்...
  விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் தொடர்களில் ஒன்று மோதலும் காதலும். கடந்த வருடம் ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்ட இந்த தொடர் 200 எபிசோடுகளுக்கு மேல் ஒளிபரப்பாகி இருக்கிறது. சுரேஷ் ஷண்முகம் என்பவர் இயக்கிவரும் இந்த தொடரில் அஷ்வதி மற்றும் சமீர் இருவரும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்கள். இந்த தொடர் ஹிந்தியில் ஒளிபரப்பாகி வந்த Yeh Hai Mohabbatein என்ற தொடரின் ரீமேக்காக தயாராகி வருகிறது. நடிகை இந்த நிலையில் தொடரில் இருந்து முக்கிய நடிகை...
  ஷாஜகான் இயக்கத்தில் எஸ்.ஏ.ராஜ்குமார் இசையமைப்பில் கடந்த 2002ம் ஆண்டு வெளியான ஒரு திரைப்படம் புன்னகை தேசம். தருண் குமார், குனல் சிங், ஹர்ஷவர்தன், சினேகா, ப்ரீத்தா விஜயகுமார், தாமு என பலர் நடிக்க இப்படம் வெளியாகி இருந்தது. தங்களது பெற்றோர்கள் திறமையை வெளிக்காட்ட வாய்ப்பு அளிக்காததால் கனவை நோக்கி பயணிக்க சென்னை வருகிறார்கள் 3 நண்பர்கள். அவர்கள் வாழ்க்கையில் சாதிக்க 4வது ஒரு நண்பர்கள் உதவுகிறார். அவரால் கனவை நோக்கி பயணிக்க சென்னை...
  சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி. இவரை டிடி என செல்லமாக அனைவரும் அழைப்பார்கள். பள்ளி பருவத்தில் இருந்தே சின்னத்திரையில் பணியாற்றி வரும் டிடியின் வாழ்க்கையில் மிகப்பெரிய உறுதுணையாக இருந்த நபர் என்றால் அது அவருடைய தந்தை தானாம். டிடியின் குழந்தை பருவத்தில் அவருடைய தந்தை ஸ்கூல் ஃபீஸ் கட்டுவதற்காக பள்ளிக்கு வரும்போது டிடி-யை அழைத்துக்கொண்டு போய், அவருடைய ஸ்கூல் ஃபீஸ் செல்லானை நிரப்ப வைத்து, டிடி கையிலேயே பணத்தை கொடுத்து...
  தளபதி விஜய் தற்போது Goat திரைப்படத்தில் நடித்து வருகிறார். பெரிதும் எதிர்பார்ப்பில் இப்படம் உருவாகி வருகிறது. இதை தொடர்ந்து தனது கடைசி படமான தளபதி 69ல் நடிக்கவுள்ளார். இப்படம் குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனால், ஹெச். வினோத் இப்படத்தை இயக்கப்போகிறார் என உறுதியாக கூறப்பட்டு வருகிறது. அதே போல், சமந்தா மற்றும் கீர்த்தி சுரேஷ் இப்படத்தில் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. கோட் சூட்டில் சஞ்சய் நடிகர் விஜய்யின்...
  ஈராக்கில் பிரபல Tik Tok பெண் ஒருவர் அவரது வீட்டிற்கு அருகில் சுட்டுக் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உந்துருளிக்கு வருகை தந்த இனந்தெரியாத நபர் ஒருவர் குறித்த பெண்ணை சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை ஈராக் பாதுகாப்பு படையினர் ஆரம்பித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியிட்டுள்ளன. கலாசாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் டிக் டாக் மூலம் வீடியோக்களை பதிவேற்றிய குற்றச்சாட்டின் பேரில் கடந்த...
  நமது அண்டை நாடான மாலத்தீவின் புதிய அதிபரான சீனாவுக்கு ஆதரவாக கருதப்படும் முகமது முய்சு பதவியேற்றதில் இருந்து இந்தியாவுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு, இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி சீன உளவுக் கப்பலை மாலத்தீவு கடற்பரப்பில் நிறுத்த அனுமதித்தது. சுமார் 6 நாட்கள் முகாமிட்டிருந்த கப்பல் திரும்பியது. இந்நிலையில் 4,500 டன் எடை கொண்ட Xiang-Yang-Hong-3 என்ற சீன உளவு கப்பல் மாலத்தீவு திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாலத்தீவின்...
  பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் மாவட்ட நீதிபதியாக ஷகிருல்லா மர்வாடை கும்பல் ஒன்று துப்பாக்கி முனையில் கடத்தி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நீதிபதி ஷகிருல்லா மர்வட் வீட்டுக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆயுதங்களுடன் வந்த கும்பல் காரை வழிமறித்து நீதிபதியை கடத்தி சென்றது. ஆப்கானிஸ்தானின் எல்லையில் உள்ள டேரா இஸ்மாயில் கான் மாவட்டம் பக்வால் என்ற கிராமத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது.நீதிபதி கார்...