அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வருகிற நவம்பர் மாதம் நடக்கிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். குடியரசு கட்சி சார்பில் துணை ஜனாதிபதி பதவிக்கு தெற்கு டகோட்டா மாகாண பெண் கவர்னர் கிறிஸ்டி நோம் போட்டியிட முயற்சித்து வருகிறார். இந்த நிலையில் கிறிஸ்டி நோம், தனது வளர்ப்பு நாய், ஆட்டை கொன்றதாக அவர் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தனது குடும்பப் பண்ணையில் கிரிக்கெட் என்று பெயரிடப்பட்ட 14...
  ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் 2 ஆண்டுகளுக்குப் பிறகும் தொடர்ந்து வரும் நிலையில் நேட்டோ உறுப்பு நாடுகளான அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு மிகவும் தேவையான இராணுவம் நிதி உதவிகளை வழங்கி வருகின்றன. இதேவேளை, அவுஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்லஸ் உக்ரைன் பயணமாகியுள்ளார். உக்ரைனின் லிவிவ் நகருக்குச் சென்ற அவர், உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷமிஹாலைச் சந்தித்துப் பேசினார். செய்தியாளர்களிடம் பேசிய Richard Marles, குறுகிய தூர...
  கனடாவில் ஆபத்தான புதிய வகை புழு தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடனாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் ஹமர்ஹெட் புழு அல்லது ப்ரோட்ஹெட் ப்லானெரியன் என்ற புழு வகை காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த வகை புழு சுமார் மூன்று அடிகள் வரையில் வளரும் எனவும், இது ஆபத்தானது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அண்மையில் ஹமில்டன் மற்றும் நியூமார்கட் பகுதிகளில் இந்த புழு வகை அண்மையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த வகை புழுக்கள் பொதுவாக தென்கிழக்காசிய நாடுகளில் காணப்படுபவை என...
  கடனாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் மான் வேட்டையாடிய சிலருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வடக்கு ஒன்றாரியோவின் மற்றும் தெமாகாமி ஆகிய பகுதிகளில் வேட்டையாடியவர்கள் இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2022ம் ஆண்டு இந்த நபர்கள் வேட்டையாடியுள்ளனர். அனுமதியின்றி குறித்த வேட்டையாடியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. நோர்த் பேயைச் சேர்ந்த கோர்ட் மெக்மில்லன் என்ற நபருக்கு நீதிமன்றம் 6000 டொலர்கள் விதிக்கப்பட்டுள்ளது. நோர்த் பேயைச் சேர்ந்த ஸாச்சாரி மெக்மில்லனுக்கு சட்டவிரோதமான அடிப்படையில் மான் இறைச்சி வைத்திருந்த குற்றத்திற்காக 2000 டொலர் அபராதம்...
  கனடியர்கள் முதலீடுகளில் நாட்டம் காட்டுவதில்லை என தெரிவிக்கப்படுகின்றது. வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு காரணமாகவே இவ்வாறான ஓர் நிலைமை உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனடியர்கள் மத்தியில், வரி மீளளிப்பு கொடுப்பனவுகளை முதலீடு செய்வது வெகுவாக குறைவடைந்துள்ளது. கனடிய இம்பிரியல் வர்த்தக வங்கி முன்னெடுத்த கருத்துக் கணிப்பு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. வரிச் செலுத்துகை மீளளிப்பு கொடுப்பனவு தொகையை முதலீடு செய்வது குறித்து வெறும் 10 வீதமான கனடியர்கள் மட்டுமே திட்டமிடுகின்றார்கள் என தெரிவிக்கப்படுகின்றது. கடன் செலுத்துகை, அத்தியாவசிய...
  பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் மரணித்தால் அவரின் இறுதிச் சடங்குகளுக்கான திட்டமிடல் புதுப்பிக்கப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மன்னரின் இறுதிச் சடங்குகளுக்கான திட்டமிடல் "Operation Menai Bridge" என்ற கருப்பொருளின் கீழ் இந்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகச் சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. நியூசிலாந்து ஹெரால்டின் அறிக்கையின்படி, மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத் 2022 ஆம் ஆண்டு அடக்கம் செய்யப்பட்ட மறுநாள் முதல்...
  ஈராக் அரசு இயற்றிய புதிய சட்டம் ஓரினச்சேர்க்கை திருமணங்களை தடை செய்கிறது. அதன்படி, ஈராக் அரசு இயற்றியுள்ள புதிய சட்டத்தின்படி, ஓரின சேர்க்கையாளர்களை திருமணம் செய்பவர்களுக்கு அதிகபட்சமாக 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். 15 ஆண்டுகள் சிறை தண்டனை புதிய சட்டம் மனித உரிமைகளுக்கு எதிரானது என சில அமைப்புகள் கருத்து தெரிவித்துள்ளன. நாட்டில் வாழும் ஓரினச்சேர்க்கையாளர்கள் மீதான தாக்குதலே புதிய சட்டம். ஓரினச்சேர்க்கையாளர் திருமணங்களை சட்டவிரோதம் என அறிவிக்கும் சட்டம் அந்நாட்டு...
  தொழில் செய்யும் அனைவருக்கும் ஓய்வூதியம் அல்லது ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி என்பன கிடைக்கும் வகையில் யோசனை முன்வைக்கப்பட உள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுச நாணயக்கார தெரிவித்துள்ளார். எதிர்வரும் வாரம் அமைச்சரவையில் இது குறித்த யோசனை முன்மொழியப்பட உள்ளது எனவும் தெரிவித்துள்ளார். புறக்கோட்டையில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைக் காரியாலயமான சிறிகொத்தவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார். மே தினம் மேலும்...
  சுகயீன விடுமுறை போராட்டத்தினை மேற்கொள்ள பொருளாதார அபிவிருத்தி சங்கம் தீர்மானித்துள்ளது. குறித்த போராட்டத்திற்காக 11 பிரதேச செயலகங்களின் 320 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் விடுமுறை எடுக்க உள்ளதாக திருகோணமலை மாவட்ட பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவர் பரமேஸ்வரன் லோஜினி தெரிவித்துள்ளார். முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் அந்த வகையில் பின்வரும் கோரிக்கைகளை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் முன்வைத்துள்ளனர், 1.பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தினுடைய நிர்வாகச் செலவில் மூன்றில் ஒரு பகுதி அதிகரிக்கப்பட வேண்டும். 2.பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு நிரந்தர போக்குவரத்து...
  எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் மலையக தமிழ் அரசியல்வாதியொருவர் அரசாங்கத்திடம் இருந்து இரண்டு மதுபான விற்பனை அனுமதிப்பத்திரங்களை பெற்றுக் கொண்டுள்ளார். குறித்த இரண்டு அனுமதிப்பத்திரங்களையும் தலா இரண்டு கோடி ரூபா வீதம் அவர் திகணைப் பிரதேச வர்த்தகர் ஒருவருக்கு விற்பனை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. மதுபான விற்பனை அனுமதிப்பத்திரம் அத்துடன் அரசாங்கத்துடன் இணைந்து கொள்வதாக வாக்களித்தே அவர் மதுபான விற்பனை அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விடயம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு (Sajith...