இலங்கையில் சமகாலத்தில் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் பெரும் அதிருப்பதியை ஏற்படுத்தியுள்ளது. அத்தியாவசிய பொருளான சீனியின் விலை அதிகரிக்கப்பட்டமையினால் பல இடங்களில் ஒரு கோப்பை தேனீரின் விலை பெருமளவில் அதிகரித்துள்ளது. ஒரு கோப்பை தேனீரின் விலை 30 ரூபாவுக்கும் ஒரு கோப்பை பால் தேனீரின் விலை 50 ரூபா வரையிலும் அதிகரித்துள்ளது. இதேவேளை திட்டமிடப்பட்டுள்ள எரிவாயு விலை அதிகரித்தால் இந்த விலை மேலும் அதிகரிக்கும் என உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறான விலை...
திருகோணமலையில் இன்று நடைபெறவுள்ள சில உத்தியோகபூர்வ நிகழ்வுகளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்கவுள்ளார். அத்துடன் ஜனாதிபதி இன்று காலை திருகோணமலை ஸ்ரீபத்திரகாளி அம்மன் கோயிலில் விசேட பூஜை வழிபாடுகளிலும் ஈடுபடவுள்ளதாக தெரியவருகிறது. எதிர்கட்சி தலைவரின் குலதெய்வ கோயிலான திருகோணமலை ஸ்ரீபத்திரகாளி அம்மன் கோயிலுக்கு வரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு விசேட வரவேற்பினை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதனையடுத்து எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன், ஜனாதிபதியுடன் அரசியல் கைதிகள் விடுதலை விவகாரம், ஐ.நா தீர்மானம்...
கொஸ்கம - அவிசாவளை வீதியில் இடம்பெற்ற விபத்தில் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். பேராதனை பல்கலைக்கழகத்தில் இறுதி வருடத்தில் கற்கும் 26 வயதான பியல் ரத்னகுமார என்ற மாணவனே உயிரிழந்துள்ளார். கொழும்பில் இருந்து மோட்டார் சைக்கிளில் பல்கலைக்கழகம் நோக்கி சென்று கொண்டிருந்த இளைஞன் மீது பேருந்து மோதியுள்ளது. இதனால் படுகாயமடைந்தவர் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞனின் பிரேத பரிசோதனை நேற்றைய தினம் வைத்தியசாலையில் இடம்பெற்றது. நெஞ்சு பகுதி மற்றும் தலையில்...
இலங்கைக்குள் இனப் பிரச்சினை என்று எதுவுமில்லை. நந்திக்கடலில் வழங்கப்பட்டது அரசியல் தீர்வு என்பதால், மேலும் தீர்வுகள் அவசியமில்லை என்று பேராசிரியர் சந்தன ஜயசுமன தெரிவித்துள்ளார். உலக தேசப்பற்றுள்ள இலங்கையர் பேரவையின் சார்பில் மனித உரிமை பேரவையில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். இதன்போது, தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், தமிழ் வேளாள தலைவர்களின் இனவாத நோக்கங்கள் மற்றும் போலியான வரலாறு காரணமாக அனைத்து இலங்கையர்களின் மனித உரிமைகளும் மீறப்பட்டுள்ளன. இலங்கை...
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சாவகச்சேரி அலுவலகம் மீது இனந்தெரியாதோரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர். சாவகச்சேரி மீசாலை மேற்கிலுள்ள இந்த அலுவலகத்தின் மீது நேற்றிரவு 11 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:- நேற்று இரவு 11 மணியளவில் மேற்படி கட்சியின் அலுவலகத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற குழுவொன்று கட்சியின் பெயர் பலகையை அடித்து சேதப்படுத்தியுள்ளது. இதன்போது கட்சியின் வயதான உறுப்பினர் ஒருவர் அந்த அலுவலகத்திற்குள்...
நாம் ஒருபோதும் தனிநாடு கோரவில்லை,  தனிஈழம் என்ற கொள்கையில் இருந்ததுமில்லை. எமக்கான அந்தஸ்துடன் வாழ்வதற்கான உரிமையையே நாம் கோரி நிற்கின்றோம் என சமூக உட்கட்டமைப்பு மற்றும் மலைநாட்டு புதிய கிராமங்கள் அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார். பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபை சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றுகையில் இதனைக் குறிப்பிட்ட அவர், தோட்ட சமுதாயத்திரனுக்கு மாற்று வாழ்வாதார வாய்ப்புக்களை உருவாக்கவும், அவர்களுக்கான வழிகாட்டல்களை வழங்கவும் பெருந்தோட்ட பிராந்தியத்துக்கான புதிய...
நாட்டில் தனி ஈழம் சிந்தனை வர கூடாதென்றால் தொடர்ந்தும் தமிழர்களுக்கு அநீதிகள் இடம்பெற கூடாது. அரச நிர்வாக போட்டி பரீட்சைகளில் தொடர்ந்தும் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவது தனி ஈழம் கேட்பதற்கு அரசாங்கம் தீனி போடுவதாக அமையும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் சபையில் தெரிவித்தார். அத்துடன் மலையக அபிவிருத்தி அதிகார சபை மற்றும் பிரதேச சபை சட்ட திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டமை பாராட்டதக்கது. ஆகவே இந்த வாய்ப்பை...
யாழ்ப்பாணத்தில் பிரதான வீதிகளில் 15 இடங்களில் வீதி ஒழுங்கு பிரச்சினைகள் உள்ளதாகவும், அவற்றை அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டியபோது அதனை அவர்கள் ஏற்றுக் கொண்டதாகவும் யாழ். பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் வருண ஜயசுந்தர தெரிவித்தார். நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இதனை தெரிவித்த  அவர், யாழ்ப்பாணத்தின் போக்குவரத்து பிரச்சசினைகள் மற்றும் விபத்துகளை தடுப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டு இருந்தேன். அதன்போது,  யாழ்ப்பாணத்தில் போக்குவரத்து நெரிசல்கள், விபத்துக்ளை கட்டுப்படுத்தும் நோக்கில் நாம்...
யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம், கொடிகாமம் நோக்கிச் சென்று கொண்டிருந்த உழவியந்திரத்தினை யாழ்ப்பாணத்திலிருந்து கண்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் முந்திச்செல்ல முற்பட்டவேளை குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்று அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிசார்  தெரிவித்துள்ளனர். கொடிகாமம் கோயிலாமனைக்கும்  இராமாவில் ஆலயத்திற்கும் இடைப்பட்ட ஏ-9பிரதான வீதியிலேற்பட்ட இவ்விபத்தில் மீசாலை வடக்கைச் சோ்ந்த 27வயதான நபர்...
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு  நோக்கி கேரளா கஞ்சாவினை கடத்தி சென்றவரை வவுனியா பொலிஸார் நேற்று   இரவு கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்  யாழ் - கொழும்பு பஸ்ஸை நொச்சிமோட்டை பகுதியில் வழிமறித்து  சோதனை மேற்கொண்ட போது குறித்த பஸ்ஸில் பயணித்த கொழும்பை சேர்ந்த  19வயதுடைய சத்தியவேல் சஞ்சீவன் என்ற இளைஞனை 6கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளின்...