அரசின் பழி வாங்கும் நடவடிக்கைகள் உள்ளிட்ட சமகால நிலைமைகள் தொடர்பில் ஆராயப்பட்வுள்ளது-சம்பந்தன்

591

meeting_tna_003
இலங்கைப் பிரச்சினையில், சர்வதேச சமூகத்தின் நிலைப்பாடு மற்றும் அதனை அணுகும் முறை தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் மாற்றுக் கருத்துக்கள் இருக்கக் கூடாது என அக்கட்சியின் தலைவரான இரா. சம்பந்தன் வலியுறுத்தி கூறியிருக்கின்றார்.
இன்று புதன்கிழமை திருகோணமலை நகர மண்டபத்தில் நடைபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றிய போதே இந்த கருத்தை அவர் வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய விடயங்கள்தமிழ் தேசியக் கூட்டமைப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் அண்மையில் தென் ஆப்பிரிக்காவிற்கு மேற்கொண்ட விஜயம் , ஐ. நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம், மற்றும் வடக்கு- கிழக்கு மாகாணங்களின் தற்போதைய நிலவரங்கள் தொடர்பாக ஆராயப்பட்ட இந்த கூட்டத்தில் வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனும் கலந்து கொண்டார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா. சம்பந்தன் குறிப்பாக தனது உரையில், சர்வதேச சமூகத்தின் ஆதரவைப் பெற்று தீர்வுக்கான பயணத்தை முன்னெடுக்கும் இந்நேரத்தில் சர்வதேச சமூகம் தொடர்பாக மாற்றுக் கருத்துக்கள் வெளியிடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கூட்ட முடிவில் செய்தியாளர்களிடம் கூறினார்

நேச நாடான இந்திய ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தில் எடுத்த தீர்மானத்தை வைத்து அந்நாட்டை புறந்தள்ளிவிட முடியாது. சில வேளை ஆட்சி மாற்றம் ஏற்படலாம். அப்படி ஆட்சி மாற்றம் ஏற்படுமானால் புதிய அரசு எப்படி செயல்படும் என்பதை தற்போதைக்கு ஊகிக்க முடியாது. ஆட்சிக்கு யார் வந்தாலும் அவர்களுடன் பேசி எமது பக்கம் ஆதரவை பெற்றுக் கொள்ள வேண்டும்.என்ற கருத்தையும் அவர் வலியுறுத்தி கூறியதாகவும் செல்வம் அடைக்கலநாதன் கூறுகின்றார்

தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கத்துவம் பெற்றுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவரான வீ. ஆனந்தசங்கரி இந்த கூட்டத்திற்கு அழைக்கப்படவில்லை என்று கூறப்படுகின்றது.

இது தொடர்பாக செல்வம் அடைக்கலநாதனிடம் கேட்ட போது அவரது அண்மைக்கால செயல்பாடுகளும் கருத்துக்களுமே தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் அவருக்குமிடையிலான இடைவெளிகளை விரிசலடையச் செய்வதாக செல்வம் அடைக்கலநாதன் பதில் அளித்தார்.

இருந்த போதிலும் அவருடன் பேச்சு வார்த்தையொன்றை நடத்தி பிரச்சினகளுக்கு தீர்வு காண்பது என்றும் இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

கூட்டமைப்பின் அடுத்த கட்ட நகர்வுகள் என்ன? சம்பந்தன் தலைமையில் கூட்டம் ஆரம்பம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்க்கமான முடிவெடுப்பதற்காக கட்சியின் முக்கிய கூட்டமொன்று இன்று காலை 10.20 மணியளவில் ஆரம்பமானது

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் தலைமையில் திருகோணமலை நகர சபை மண்டபத்தில் இக்கூட்டம் ஆரம்பமானது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் வடக்கு மாகாணசபை முதலமைச்சர் உட்பட திருகோணமலை நகரசபை தலைவர் க.செல்வராஜா மற்றும் உப தலைவர் சிறிஸ்கந்தராஜா, திருகோணமலை மாவட்ட இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் க.துரைரெட்ணசிங்கம், கூட்டமைப்பின் முக்கியஸதர்கள், வடமாகாண சபை அமைச்சர்கள், வடமாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள், எதிர்க்கட்சித் தலைவர் சி.தண்டாயுதபாணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த முக்கிய சந்திப்பில் இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வு பேச்சிக்கான தென்னாபிரிக்காவின் மத்தியஸ்தம், கூட்டமைப்பின் உயர் மட்டக் குழுவின் தென்னாபிரிக்க விஜயம், ஜெனிவாவில் கடந்த மார்ச் மாதம் இலங்கை அரசிற்கு எதிராக அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்புரிமை நாடுகளினால் நிறை வேற்றப்பட்ட திர்மானம் மற்றும் வடக்கு கிழக்கில் தமிழ் மக்களை இலக்கு வைத்து தொடரும்

SHARE