இலங்கை தமிழரசுக்கட்சியின் புதிய தலைவராக பதவியேற்றுள்ள மாவை. சேனாதிராஜாவுக்கு கிளிநொச்சி மாவட்டத்தின் கட்சிக்கிளையின் சார்பில் இன்று வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

484
இலங்கை தமிழரசுக்கட்சியின் புதிய தலைவராக பதவியேற்றுள்ள மாவை. சேனாதிராஜாவுக்கு கிளிநொச்சி மாவட்டத்தின் கட்சிக்கிளையின் சார்பில் இன்று வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை கிளிநொச்சி மாவட்டத்தின் கட்சியின் அலுவலகமான அறிவகத்தில் கட்சியின் மாவட்டக்கிளையின் தலைவரும் பா.உறுப்பினருமான சி.சிறீதரன் தலைமையில் இவ் வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றது.

இந் நிகழ்வில், தலைவர் மாவை. சேனாதிராஜாவுக்கு வடமாகாணசபை அமைச்சர் குருகுலராஜா உறுப்பினர் அரியரத்தினம் கரைச்சி பிரதேசபை உபதவிசாளர் நாவை.குகராஜா கரைச்சி பிரதேசசபை உபதவிசாளர் உறுப்பினர்கள் கட்சியின் மாவட்டக்கிளையின் இளைஞர் அணி மகளிர் அணி பிரதேசக்கிளையை சேர்ந்தவர்கள் என பெருமளவான ஆதரவாளர்கள் தொண்டர்கள் மாலைகள் அணிவித்து, பொன்னாடைகள் போர்த்தி மதிப்பளித்து வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தனர்.

நிகழ்வில் நன்றி தெரிவித்து பதிலுரை நிகழ்த்திய தமிழரசுக்கட்சியின் புதிய தலைவர் மாவை.சேனாதிராஜா மேலும் உரையாற்றுகையில்,

தனக்கு அளிக்கப்பட்ட இந்த வரவேற்பு தனக்கு இருக்கிற மக்கள் பணியை மேலும் தெளிவுபடுத்துகின்றது என்றும், தந்தை செல்வா பாசறையிலும் சிறையிலும் தனக்கு கிடைத்த அனுபவங்கள் பற்றியும், கட்சியின் மூத்த தலைவர் உடனான அனுபவங்கள், தம்பி பிரபாகரனுடனான நட்பு அனுபவங்கள் பற்றியும் ஆழமான உணர்வுடன் பகிர்ந்துகொண்டார்.

நான் என்பதற்கு அப்பால் நாங்கள் எல்லோரும் எமது தமிழ் மக்களின் விடுதலைக்காக உழைப்போம் என வேண்டுகோள் விடுத்தார்.

 

SHARE