உலக கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி: புதிய வரலாறு படைப்பது யார்?

537

20–வது உலக கோப்பை கால்பந்து போட்டி பிரேசிலில் நடைபெற்று வருகிறது.

இதன் இறுதிப் போட்டி இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு நடக்கிறது.

இதில் ஐரோப்பா கண்டத்தை சேர்ந்த பிலிப்லாம் தலைமையிலான ஜெர்மனி– தென்அமெரிக்க கண்டத்தில் உள்ள லியோனல் மெர்சி தலைமையில் உள்ள அர்ஜென்டினா அணிகள் மோதுகின்றன.

இரு அணிகளும் சமபலம் பொருந்தியது என்பதால் இறுதிப்போட்டி விறு விறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தென் அமெரிக்கா கண்டத்தில் நடந்த போட்டிகளில் ஐரோப்பிய அணிகள் வென்றது கிடையாது. தற்போது முதல் முறையாக கோப்பையை வென்று புதிய வரலாறு படைக்க ஜெர்மனி அணிக்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.

3 முறை உலக கோப்பையை வென்ற ஜெர்மனி 4–வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் ஆர்வத்தில் உள்ளது. 28 ஆண்டுகளுக்கு பிறகு உலக கோப்பையை கைப்பற்றி வரலாறு படைக்க அர்ஜென்டினா அணி காத்திருக்கிறது. மேலும் 3–வது முறையாக கோப்பையை வெல்லும் ஆர்வத்திலும் அந்த அணி உள்ளது.

அர்ஜென்டினாவை விட ஜெர்மனி சற்று வலுவாக இருந்தாலும் மெஸ்சி மீதுதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

4 முறை உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருதை பெற்ற அவர் இந்த தொடரில் 4 கோல்கள் அடித்துள்ளார். ஒரு கோல் அடிக்க உதவியாக இருந்துள்ளார்.

அவர் பந்தை கடத்தி செல்லும் விதமும், எதிர் அணி வீரர்களை ஏமாற்றி கொண்டு செல்லும் விதமும், சக வீரர்களுக்கு பந்தை கொடுக்கம் விதமும் அற்புதமாக இருக்கிறது.

இதனால் எதிர் அணியை சேர்ந்த வீரர்களில் 3 அல்லது 4 பேர் அவரை சூழ்ந்து விடுகிறார்கள். அவரை குறி வைத்து எதிர் அணி செயல்படுகிறது.

ஜெர்மனியின் நடுகளமும், பின்களமும் மிகவும் வலுவாக இருப்பது மெஸ்சிக்கு சவாலாக இருக்கும். இதனால் அவர் இறுதிப் போட்டியில் முழு திறமையுடன் போராட வேண்டிய நெருக்கடி உள்ளது.

அர்ஜென்டினா அணி மெஸ்சி ஒருவரைதான் அதிகமாக நம்பி இருக்க வேண்டிய நிலை இருக்கிறது.

ஆனால் ஜெர்மனி அணியோ கூட்டு முயற்சியில் சிறப்பாக இருக்கிறது. வீரர்கள் ஒவ்வொருவரும் இணைந்து விளையாடுவது அந்த அணிக்கு பிளஸ்பாயிண்ட் ஆகும்.

தாமஸ்முல்லர், குருஸ் அந்தரே, ஏசில், குலுஸ், கேப்டன் லாம், சேதனியா போன்ற தலைசிறந்த வீரர்கள் அந்த அணியில் உள்ளனர். கோல் அடிப்பதில் அனைத்து வீரர்களும் சிறந்தவர்கள்.

 

SHARE