கனடியத் தமிழர்கள் கறுப்பு ஜூலையின் 31 ஆம் ஆண்டு நினைவுகளை நேற்று உணர்வெழுச்சியோடு நினைவு கூர்ந்தார்கள்.

402

 

கனடியத் தமிழர்கள் கறுப்பு ஜூலையின் 31 ஆம் ஆண்டு நினைவுகளை நேற்று உணர்வெழுச்சியோடு நினைவு கூர்ந்தார்கள்.

கனடா டொரோண்டோ, ஸ்கார்புரோ நகரில் உள்ள அல்பேர்ட் சதுர்க்கத்தில் நேற்று மாலை 6:00 மணிக்கு கறுப்பு ஜுலையின் நினைவு நிகழ்வுகள் இடம்பெற்றன.  இந்த நிகழ்வில் பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பல்வேறு வேற்றின அரசியல் பிரமுகர்களும் வருகை தந்து சிறப்புரை ஆற்றினார்கள்.

அவர்கள் தமது உரையில், தமிழர்களின் துன்பங்களில் பங்கேடுப்பதாகவும், பாராளுமன்றத்தில் தமிழர்களின் குரலாக தாங்கள் ஒலிப்போம் எனவும் உறுதி அளித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட International Assosiation of Genocide Scholars இன் தலைவரும் பேராசிரியருமான Danial Ferenstein சிறப்புரை ஆற்றினார்.

அவர், ஈழ மண்ணில் இனப்படுகொலையே நடைபெற்றது  என்பதை வலியுறுத்தி பேசினார். உலகெங்கிலும் இனப்படுகொலைகள் நடைபெற்றிருந்தாலும் எங்குமே நடைபெறாத கொடிய இனப்படுகொலை வடிவம் தமிழீழத்தில் நடைபெற்றது எனத் தெரிவித்தார்.

TPN NEWS

 

SHARE