காணாமல் போனவர்களின் விசாரணை நாளை கிளிநொச்சியில்

406
mmm81
காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு நாளை கிளிநொச்சியில் தனது விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளது.
pol08-600x401

விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தத்தின்போது காணாமல் போனோரைக் கண்டறியும் பொருட்டு ஜனாதிபதி விசேட ஆணைக்குழுவொன்றை நியமித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு, தென்னிலங்கை என்று நாட்டின் பல பகுதிகளில் இந்த ஆணைக்குழு தனது விசாரணைகளை மேற்கொண்டிருந்தது.

எனினும் வவுனியா மாவட்டத்தில் மட்டும் இந்த ஆணைக்குழுவின் விசாரணைகள் இடம்பெறவில்லை.

இந்நிலையில் நாளை தொடக்கம் 30ம் திகதி இந்த ஆணைக்குழுவினர் தங்களது விசாரணைகளை கிளிநொச்சி மற்றும் பூநகரியில் மேற்கொள்ளவுள்ளனர்.

27, 28ம் திகதிகளில் கிளிநொச்சியிலும், 29,30 திகதிகளில் பூநகரியிலும் ஆணைக்குழுவின் விசாரணை இடம்பெறும் என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

 

SHARE