சஜித் பிரேமதாச தற்போது பிரதித் தலைவராக நியமிக்கப்பட மாட்டார்- ஐ.தே.கட்சியின் தகவல்கள்

372
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவிற்கு ராஜயோகம் உண்டெனன பிரபல ஜோதிடவியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சரத் சந்திர போதலகே என்ற ஜோதிடரே இவ்வாறு ஆரூடம் கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் கிரக நிலைகள் மோசமாக காணப்படுகின்றன.

இதன் காரணமாகவே தேர்தல்களில் தோல்வி ஏற்படுகின்றது.

எதிர்வரும் ஊவா மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னதாக கட்சித் தலைமையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டால் தேர்தலில் வெற்றியீட்ட முடியும்.

மிதுன ராசிக்காரரான சஜித் பிரேமதாசவிற்கு தற்போது ராஜயோகம் காணப்படுகின்றது.

கட்சியில் அதிக அதிர்ஸ்டம் சஜித்திற்கே காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சஜித் பிரேமதாசவிற்கு கட்சியின் பிரதித் தலைவர் வழங்கும் முனைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மங்களவை கட்சியில் இருந்து நீக்குமாறு ரணிலுக்கு அழுத்தம்

ஐக்கிய தேசியக் கட்சியின் தொடர்ப்பாடல் பிரிவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மங்கள சமரவீரவை உடனடியாக கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என ஊடக நிறுவனம் ஒன்றின் தலைவர் ஒருவர் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையக தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக சஜித் பிரேமதாச நியமிக்கப்படுவதை மங்கள சமரவீர எதிர்த்து வருவதே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

குறித்த ஊடக நிறுவனத்தின் தலைவர் கடந்தகாலங்களில் பல தடைவைகள் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து, சஜித் பிரேமதாசவை பிரதித் தலைவராக நியமிக்குமாறு அழுத்தம் கொடுத்துள்ளார்.

இதனிடையே நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர நேற்று அவசரமாக வெளிநாடு புறப்பட்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

சஜித் பிரேமதாச தற்போது பிரதித் தலைவராக நியமிக்கப்பட மாட்டார்- ஐ.தே.கட்சியின் தகவல்கள்

சஜித் பிரேமதாசவை பிரதித் தலைவராக நியமிக்கும் யோசனையை சில காலங்களுக்கு ஒத்திவைக்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளதாக அந்த கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவான பிக்குமார் மற்றும் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கையை கவனத்தில் கொண்டு தான் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக ரணில் விக்ரமசிங்க, கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலரிடம் நேற்று கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் அடுத்த ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து ஐக்கிய தேசியக் கட்சியின் பதவிகளில் மாற்றங்களை செய்ய உள்ளதாகவும் வெற்றிடமாக இருக்கும் பிரதித் தலைவர் மற்றும் பொருளாளர் பதவிகளுக்கான நபர்கள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நியமிக்கப்படுவார்கள் எனவும் ஐ.தே.கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க நேற்று கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் பதவிக்கு ஒருவரை நியமிப்பது சம்பந்தமாக கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டன. சஜித் பிரேமதாசவை அந்த பதவிக்கு நியமிப்பது குறித்தும் யோசனைகள் முன்வைக்கப்பட்டன.

அதேபோல் பொருளாளர் பதவிக்கும் வெற்றிடம் நிலவுகிறது. அத்துடன் மேலும் பல திருத்தங்கள் செய்யப்படவிருக்கின்றன.

இரண்டு வாரங்களுக்கு இந்த விடயங்கள் தொடர்பில் தெளிவாக பதில் வழங்கப்படும். செப்டெம்பர் மாதம் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூடி இது குறித்து முடிவெடுக்கும் என திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

ஊவா மாகாண சபைத் தேர்தலை கவனத்தில் கொண்டு இந்த முடிவுகள் எடுக்கப்படவில்லை. ஜனாதிபதித் தேர்தலுக்கு கட்சியை தயார்ப்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்

– See more at: http://www.newstamilwin.com/show-RUmsyIQVKUlo5.html#sthash.fWKVhNLY.dpuf

SHARE