அமெரிக்காவின் நியூயோர்க்கில் உள்ள செல்சாவில் பயங்கரமாக குண்டுவெடித்ததில் 25க்கும் மேலானோர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்ளூர் நேரப்படி இரவு 8.30 மணியளவில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. இந்நிலையில் லோயர் மன்ஹாட்டன் பகுதியில் ஆயிரக்கணக்கான பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள 23வது தெருவில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததில், அங்கிருந்த கட்டிடம் சேதமடைந்துள்ளது. இதற்கிடையே அதிகாரப்பூர்வமற்ற தகவலாக அப்பகுதியில் இருந்த குப்பைத் தொட்டியில் இருந்து வெடிகுண்டு வெடித்தது என்று தெரிவித்தன. இதனை உறுதிசெய்யும் விதமாக,...
  நோர்வே நாட்டில் 4 மாத பச்சிளம் குழந்தையை தாக்கிய குற்றத்திற்காக அக்குழந்தையின் தந்தைக்கு 8 வருடங்கள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நோர்வே நாட்டின் தலைநகரான ஓஸ்லோவில் பெற்றோர் இருவர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சில மாதங்களுக்கு முன்னர் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்நிலையில், ஓர் இரவில் 4 மாதமே ஆன குழந்தையின் தலையில் தந்தை கொடூரமாக தாக்கியுள்ளார். இதனால் குழந்தையின் மூளை வெகுவாக பாதிக்கப்பட்டது. எனினும், குழந்தையை எதற்காக தாக்கினார்...
  ஸ்பெயின் நாட்டில் பெண் ஒருவர் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு கார் ஓட்டியபோது நிகழ்ந்த விபத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெயின் தீவுகளில் ஒன்றான Mallorca என்ற நகரில் இரண்டு தினங்களுக்கு முன்னர் 44 வயதான பொலிஸ் அதிகாரி ஒருவர் தனது மகனுடன் சைக்கிளில் பயணம் செய்துள்ளார். அப்போது, அசுர வேகத்தில் வந்த கார் ஒன்று பொலிஸ் மீது மோதிவிட்டு அங்கிருந்து நிற்காமல் பறந்துள்ளது. இந்த விபத்தில்...
  சிரியா விமான படைகளுக்கு சொந்தமான போர் விமானத்தை ISIS தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிரியாவின் கிழக்கு பகுதியில் பறந்து கொண்டிருந்த சிரியாவின் போர் விமானத்தையே ஏவுகணை உதவியுடன் ஐஎஸ் தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தியுள்ளனர். ஜீபில் டார்டா என்னும் ஏரியா அருகில் விமானி விமானத்தை தரையில் இறக்கும் போது இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என அவதானிக்கப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தில் விமானி சம்பவ இடத்திலேயே பலியானதாக மனித உரிமை கண்காணிப்பு...
  பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் கீழ் இளம்பெண் ஒருவரை 3 புலம்பெயர்ந்தவர்கள் கொடூரமாக கற்பழித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாரீஸ் நகரில் பெயர் வெளியிடப்படாத 19 வயதான இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். சமூக வலைத்தளமான பேஸ்புக் மூலம் 17 வயதான அல்ஜீரியா நாட்டை சேர்ந்த நபர் ஒருவருடன் இளம்பெண் பழகியுள்ளார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் பாரீஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் கீழ் சந்திக்கலாம் என அந்த வாலிபர்...
  உத்தேச புதிய அரசியலமைப்புச் சட்டத்தில் பௌத்த மதத்தை பாதுகாக்க சில நேரம் மேலும் ஒரு ஷரத்தை சேர்க்க வேண்டியிருக்கும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இது குறித்து மல்வத்து மாநாயக்க தேரருடன் கலந்துரையாடப்படும் எனவும் பிரதமர் கூறியுள்ளார். உத்தேச புதிய அரசியலமப்புச் சட்டத்தின் மூலம் மாகாண சபைகளுக்கு மாத்திரமல்லாது பிரதேச சபைகளுக்கும் நகர சபைகளுக்கும் அதிகாரம் பரவலாக்கப்படும். புதிய அரசியலமைப்புச் சட்டம் நாடாளுமன்ற மற்றும் சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்படும். பௌத்த மத்திற்குரிய...
  சம்பூர் திட்டத்தை அரசாங்கம் கைவிட்டதால் நாட்டின் மின்சாரத் துறையில் பாரிய நெருக்கடி நிலைமை ஏற்படக்கூடுமென இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. திருகோணமலை சம்பூர் அனல் மின்நிலையத்தினை நிறுத்த கோரி சம்பூர் மக்கள் தொடர்ந்தும் பாரிய போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்கள். இந்த நிலையில் மக்களின் கோரிக்கைகளுக்கு அமைய குறித்த திட்டத்தை அரசாங்கம் நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளது. மக்களின் இந்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்டதால் இலங்கை மின்சாரசபைக்கு பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சம்பூர் அனல்...
  போர் முடிவுக்கு வந்து ஏழு ஆண்டுகளாகியும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை, தமிழ் மக்களுக்கான அரசியல் அதிகாரங்கள் பகிரப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்திக் கொண்டிருக்கும் தமிழர் அரசியல் தரப்பு, தமிழர் பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு காண்பது என்பது தொடர்பான எந்த உறுதியான நிலைப்பாட்டுக்கும் வரமுடியாத நிலையில்தான் இருக்கிறது. மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் பதவியில் இருந்து அகற்றப்படுவதற்கு முந்திய பல தசாப்தங்களாக தமிழர்களால் பேசப்பட்டு வந்த பிரதான விடயம், அதிகாரப் பகிர்வோ,...
  நாட்டில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் சீ.சீ.டீ.வி கெமரா பொருத்தப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த சீ.சீ.டீ.வி கெமராக்கள் மஹர மற்றும் களுத்துறை சிறைச்சாலைகளிலேயே முதன்முதல் பொருத்தப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஆணையாளர் ஜெனரல் நிசான் தனசிங்க தெரிவித்துள்ளார். இதன் மூலம் சிறைச்சாலைகளுக்குள் நடைபெறும் சட்டவிரோத செயற்பாடுகளை கண்காணிக்க முடியும் என்றும்,இதற்கு தேவையான தொழிநுட்ப ஒத்துழைப்புக்கள் பல்கலைக்கழகங்களின் ஊடாக பெறுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அடுத்த வருடம் இந்த சீ.சீ.டீ.வி கெமராக்கள் பொருத்தும்...
  அரச வளங்களை தவறாக பயன்படுத்தியமை, பணச் சலவை, தவறான முறையில் பணத்தை சம்பாதித்தமை, போலி ஆவணங்களை தயாரித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் உறுதியானத்தை அடுத்து சீ.எஸ்.என். தொலைக்காட்சி மற்றும் அந்த நிறுவனத்திற்கு சொந்தமான சொத்துக்களை அரசுடமையாக்கும் ஆவணங்கள் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது. சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைத்த பின்னர் சீ.எஸ்.என் ஊடக வலையமைப்பு மற்றும் அதற்கு சொந்தமான சொத்துக்களை அரசுடமையாக்க முடியும்...