நாட்டின் அடுத்த ஜனா­தி­ப­தி­யாக கோத்­த­பாயவை உரு­வாக்க வேண்டும்- பொது­ப­ல­சே­னா­

423

பாது­காப்பு செய­லா­ள­ரான கோத்­த­பாய ராஜபக்ஷவை இந்த நாட்டின் அடுத்த ஜனா­தி­ப­தி­யாக உரு­வாக்க வேண்டும் என்­ப­தற்­கா­கவே பொது­ப­ல­சே­னா­வினர் பெளத்த சிங்­கள மாநாடு ஒன்றை ஏற்­பாடு செய்­துள்­ளனர் என்று நவ­ச­ம­ச­மாஜ கட்­சியின் தலைவர் விக்­கி­ர­ம­பாகு கரு­ணா­ரத்ன தெரி­வித்தார். அர­சியல் அமைப்பின் 18ஆம் திருத்­தச்­சட்­டத்­தின்­படி தான் மீண்டும் ஜனா­தி­ப­தி­யா­கலாம் என்று மஹிந்த கண்ட கனவு தொடர்பில் பல்­வேறு சட்ட சர்ச்­சைகள் எழுந்­துள்­ள­மை­யினால் கோத்­த­பா­யவை அடுத்த ஜனா­தி­ப­தி­யாக களம் இறக்­கு­வ­தற்கு அர­சாங்கம் முன்­னெ­டுத்­துள்ள நிகழ்ச்சி திட்­டங்­களில் ஒன்றே பொது­ப­ல­சே­னா­வினர் ஏற்­பாடு செய்­துள்ள இந்த பெளத்த சிங்­கள மாநா­டாகும் என்றும் அவர் மேலும் தெரி­வித்தார்.

நேற்று கொழும்பில் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்;

பல்­வேறு இன மக்கள் வாழும் இந்த நாட்டில் மத இன­வா­தங்­களை ஏற்­ப­டுத்தி பல்­வேறு வன்­முறை சம்­ப­வங்­க­ளுக்கு கார­ண­மான பொது­ப­ல­சே­னா­வினர் பெளத்த சிங்­கள மாநாடு என்ற ஒன்­றினை ஏற்­பாடு செய்­துள்­ளமை இன மத நல்­லி­ணக்­கங்­க­ளுக்கு எதி­ரான ஒன்று. இதற்­கான அனு­ம­தியை கொடுத்­தது யார் என்று யோசிக்க வேண்டும்.

எதிர்­வரும் 28ஆம் திகதி சுக­த­தாச விளை­யாட்டு அரங்கில் பொது­ப­ல­சே­னா­வினர் இம்­மா­நாட்­டினை நடத்த உள்­ள­தாக தெரி­வித்­துள்­ளனர். இது சர்ச்­சைக்­கு­ரிய மாநாடு இதனை அர­சாங்கம் தடுத்து நிறுத்­தாமல் சுக­த­தாச அரங்கில் குறித்த மாநாடு நடை­பெ­று­வ­தற்கு அனு­மதி வழங்­கி­யுள்­ளது என்­பது தெட்ட தெளி­வான உண்மை.

பொது­ப­ல­சே­னா­வினர் என்றபெயரில் இந்த மாநாட்­டினை நடாத்­து­வது அர­சாங்­கம்தான். அர­சாங்­கத்­தினால்தமிழ் – முஸ்லிம் மக்­களின்வாக்­கு­களை ஒரு­போதும் பெற முடி­யாது. செல்­வாக்கு சரிந்து விட்­டது என்­பதனால் சிங்­கள மக்­களின் வாக்­கு­களை பெறு­வ­தற்கு நாடகம் நடத்­து­கின்­றது. இதனை ஊவா தேர்தல் நமக்கு படம் போட்டு காட்டி விட்­டது. பது­ளையில் சிறு­பான்­மை­யி­னரின் வாக்கு தனக்கு கிடைக்­காது என்­ப­தனை அறிந்த அர­சாங்கம் அங்கு வன்­மு­றை­களில் பெரி­ய­ளவில் ஈடு­ப­ட­வில்லை. ஆனால் சிங்­கள மக்கள் செறிந்து வாழும் மொன­ரா­க­லையில் தனது வெறி­யாட்­டத்தை நடத்­தி­யது. சிங்­கள மக்­க­ளிடம் வன்­மு­றை­களை ஏற்­ப­டுத்தி தனது வாக்­கு­களை பலப்­ப­டுத்­தி­யது.

மொன­ரா­கலை மாவட்­டமே இனி­வரும் தேர்தல் எவ்­வாறு நடை­பெறும் என்­ப­தற்­கான முன்­னு­தா­ர­ண­மாக திகழ்­கின்­றது. வன்­மு­றை­க­ளினால் ஆட்­சி­யினை எப்­ப­டியும் கைப்பற்­றலாம் என்­ப­தனை இத்­தேர்தல் தெட்­ட­த்தெ­ளி­வாக வெளிக்­காட்­டி­யுள்ளது. கல­கொட ஞான­சார தேரர் மற்றும் பிர­தம மந்திரி
டி.எம். ஜய­ரத்ன ஆகியோர் இதனை இன எழுச்­சியின் வெற்றி என்று கூறி­யுள்­ளனர்.

உண்­மையில் மொன­ரா­க­லையில் நீதி­யான தேர்தல் நடை­பெ­ற­வில்லை. அவ்­வாறு ஒரு தேர்தல் நடை­பெற்று இருந்தால் இந்த அர­சாங்கம் வீட்­டுக்கு செல்­வ­தற்­கான முதல் தளம் இடப்­பட்­டி­ருக்கும். பாஸிஸ வாதி­யான மஹிந்த ராஜபக் ஷ இன மத பேதங்­களை ஏற்­ப­டுத்தி ஆட்­சியை தக்க வைக்­கலாம் என்று கனவு காண்­பது தவ­றா­னது. ஊவா தேர்­தலில் இனஇ மத பேதம் பார்க்காது ஐ.தே.க. வேட்­பாளர் ஹரீன் பெர்­னா

ண்டோ வெற்­றி­யீட்­டி­யுள்ளார். அவ­ருக்கு மொத்த தமிழ் முஸ்லிம்இ சிங்­கள மக்­களின் வாக்­கு­களும் கிடைத்­துள்­ளன. இது மக்கள் என்றும் இன­வா­தத்­தினை மத­வா­தத்­தினை விரும்­ப­வில்லை என்­பதை எடுத்­துக்­காட்­டி­யுள்­ளது.

யுத்த வெற்றி என்று கூறி நவீன ஹிட்லர் மஹிந்த ராஜபக் ஷவினால் இனியும் மக்­களை ஏமாற்ற முடி­யாது. ஹிட்­லரும் தேர்தல் நடத்­தினார். ஆனால் அவரே வென்றார். அது­போ­லதான் மஹிந்த ராஜபக் ஷவும் என்­ப­தனை நாம் மறந்து விடக்­கூ­டாது.

எனக்கு எதி­ராக அர­சாங்க ஊட­கங்­களில் பல்­வேறு நிகழ்ச்­சிகள் ஒளி­ப­ரப்­பப்­ப­டு­கின்­றன. உண்­மையில் நான் அதிக வாக்­கு­களை பெற்று வெற்­றி­யீட்­டிய பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அல்ல. எனக்கு கிடைக்கும் வாக்­குகள் ஆயிரம் கூட இல்லை. எனது கட்சி பல்­லா­யிரம் அங்கத்தவர்களை கொண்டது அல்ல. இந்நிலையில் எதற்காக அரசாங்கம் என்னை விமர்சிக்கிறது என்றால் பயம் நான் உண்மையை பேசுகின்றேன். இதனால் அரசாங்கத்திற்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவே என்னை விமர்சிக்கின்றது.

அரசாங்கம் சிங்கள மக்களை புதிய யுத்திகளை பயன்படுத்தி ஏமாற்றுகிறது. ஆனாலும் இந்த ஏமாற்று வித்தையினால் என்றைக்கும் ஜெயிக்கலாம் என்று கனவு காண்பது தவறானதாகும் என்றார்.

SHARE