பாகிஸ்தான் தலைநகரில் இரட்டை குண்டு வெடிப்பு

507
பாகிஸ்தானில் இரண்டு குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தில் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிகாலை 2 மணி அளவில் நகரின் மையப்பகுதியில் உள்ள சூப்பர் மார்கெட்டில் குண்டு வெடித்துள்ளது. இதில் இரண்டு பேர் காயம் அடைந்துள்ளனர். இது தற்கொலைப்படை தாக்குதலா எனபது தெளிவாக தெரியவில்லை. இந்த தாக்குதலில் வாட்ச்மேன் இருவர் படுகாயம் அடைந்தனர் என்று அங்குள்ள மூத்த போலீஸ் அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர்.

அதேபோல் அரை மணி நேரம் கழித்து இஸ்லமாபாத்தின் மற்றொரு பகுதியில் குண்டு வெடித்துள்ளது. எனினும் இதில் யாருக்கும் காயம் இல்லை.

SHARE