மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே விபத்தில் மரணம்:

493

டெல்லியில் விமான நிலையத்திற்கு செல்லும் வழியில் கார் விபத்தில் அகால மரணமடைந்த மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டேவின் உடலுக்கு பிரதமர் நரேந்தி மோடி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரான கோபிநாத் விமான நிலையத்திற்கு செல்லும் வழியில் அவருடைய கார் விபத்துக்குள்ளானதில் காயமடைந்த அவரை எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கும் போது மாரடைப்பால் முண்டே உயிரிழந்துள்ளார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக டெல்லி பாஜக அலுவலகத்தில் வைக்கப்பட்டது.

அவரது உடலுக்கு பிரதமர் மோடி, பாஜக தலைவர்கள் மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் அஞ்சலி செலுத்தினர். மேலும், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தியும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களும் சென்று அஞ்சலி செலுத்தினர்.

 

ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் 

மோடியின் அமைச்சரவையில், கோபினாத் முண்டே ஊரக  வளர்ச்சித்துறையை கவனித்து வந்தார். மராட்டிய மாநிலம் பீத் தொகுதியில் இருந்து முண்டே மக்களவைக்கு தேர்வாகியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாளை இறுதிச்சடங்கு

மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டேவின் இறுதிச்சடங்கு நாளை  நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சொந்த ஊரான மராட்டி மாநிலம் பரலியில் முண்டேவின் இறுதிச்சடங்கு நடக்க உள்ளது.

5 முறை எம்.எல்.ஏ

 மராட்டிய சட்டப்பேரவைக்கு 5 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் கோபிநாத் முண்டே.1995-1999 வரை மராட்டிய மாநில துணை முதலமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். மராட்டிய மாநிலம் பரலியில் 1949-ம் ஆண்டு டிசம்பர் 12-ல் பிறந்தார் கோபிநாத் முண்டே.

பிரதமர் மோடி இரங்கல்

மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டேவின் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

SHARE