யாழில் இராணுவத்தில் இணைந்து கொண்டவர்களுக்கு நியமனம்

461

சிவில் பாதுகாப்பு படையில் இணைத்துக் கொள்ளப்பட்ட யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த 58 பேருக்கு இன்று நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வு பலாலி பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது.

வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா பூஜித ஜயசுந்தர, யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி உதயப்பெரேரா, யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ் அத்தியட்சகர் றொகான் டயஸ், பிரதேச செயலாளர்கள், கிராம சேவகர்கள், இராணுவ உயரதிகாரிகள் கலந்து கொண்டு நியமனக் கடிதங்களையும் வழங்கி வைத்தனர்.

மேலும் குறித்த நிகழ்வில் சிவில் பாதுகாப்பு படையில் இணைந்துள்ள இளைஞர் யுவதிகளின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

 

 

SHARE