தவறான விளம்பர குற்றச்சாட்டினால் நீதிமன்ற விசாரணையை எதிர்நோக்கும் கோகோ-கோலா நிறுவனம்

482

 

அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டுவரும் பிரபல குளிர்பான நிறுவனம் கோகோ-கோலா ஆகும். இந்த நிறுவனத்தின் ஒரு தயாரிப்பான மினிட் மெய்டில் சிறிதளவே சேர்க்கப்பட்டுள்ள மாதுளை மற்றும் அவுரி நெல்லியை விளம்பரத்தில் பிரதானமாகக் குறிப்பிட்டு விலை குறைவாக விற்கப்படுவதாக சமீபத்தில் ஒரு புகார் வெளிவந்தது. அங்குள்ள மாதுளை உற்பத்தியாளர்கள் அமைப்பான ‘பொம் ஒண்டர்புல்’ தங்களின் தயாரிப்பை அதிக விலைக்கு விற்கின்றது.

ஆனால் இந்த குளிர்பானத்தில் 85 சதவிகிதம் மாதுளை சாறும், 15 சதவிகிதம் அவுரிநெல்லி சாறும் கலந்துள்ளதாகவும் அந்நிறுவனம் தங்களது புகாரில் குறிப்பிட்டிருந்தது. இவர்களின் குளிர்பானம் கோகோ-கோலாவை விட ஐந்து மடங்கு அதிக விலையுள்ளதாகக் கருதப்படுகின்றது. எனவே தவறான விளம்பரம் மூலம் கோகோ-கோலா வாடிக்கையாளர்களை ஈர்க்கின்றது என்று பொம் நிறுவனம் குற்றம் சுமத்தியது.

இந்த வழக்கு கடந்த வியாழக்கிழமை அன்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி அந்தோணி கென்னடி கோகோ-கோலாவின் தயாரிப்பில் 99.4 சதவிகிதம் ஆப்பிள் மற்றும் திராட்சை பழ சாறும் 0.5 சதவிகிதமே மாதுளை மற்றும் அவுரிநெல்லி சாறும் கலந்துள்ளது என்று தெரிவித்தார்.

பெரிய அளவில் பெயர் போடப்பட்டுள்ளபோதிலும் அதன்கீழ் சிறிய எழுத்துகளில் கோகோ-கோலாவின் விளம்பரத்தில் ஐந்து பழச் சுவைகளின் கலவை என்று குறிப்பிடப்பட்டிருப்பதுவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதன்மூலம் பொம் வொண்டர்புல் நிறுவனம் கோகோ-கோலா நிறுவனத்தின் மீது வழக்கு தொடர அனுமதிப்பதாக நீதிபதிகள் குழு தெரிவித்துள்ளது.

SHARE