2015க்கு பிறகு தற்போது 2023ல் சென்னை நகரம் வெள்ளத்தில் மூழ்கி இருக்கிறது. அரசு மற்றும் தன்னார்வலர்கள் மீட்பு பணிகளை செய்து வருகின்றனர். சில இடங்கள் சகஜ நிலைக்கு திரும்பினாலும், தாழ்வான பகுதிகள் இன்னும் தண்ணீரில் தான் இருக்கின்றன.
இந்நிலையில் விஷால் அரசை விமர்சித்து ஒரு பதிவை போட்டிருந்தார். மேலும் 2015ல் களத்தில் இறங்கி மக்களுக்கு உதவிய விஷால் இந்த முறை வெளியில் கூட வராதது ஏன் என்றும் கேள்வி எழுந்திருக்கிறது.