56 வயது நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

533
தூக்கில் தொங்கிய நிலையில்
தலவாக்கலை லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கந்தவத்தை தோட்டத்தில் நேற்று மாலை 5 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டது.

கல்கந்தவத்தை தோட்டத்திலுள்ள லயன் அறையொன்றிலே சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

து.பத்மநாதன் என்ற 56 வயது நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன் இது தொடர்பான விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE