அதிகாலையில் கிளிநொச்சியில் திடீரென சரிந்து விழுந்த பாரிய மரம்!

96

 

பாரிய வேப்பமரம் ஒன்று விழுந்ததில் வர்த்தக நிலையம் ஒன்று உட்பட இரண்டு கடைகள் சேதமடைந்துள்ளன.

இன்று(20-11-2023) அதிகாலை ஒரு மணியளவில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

சேதம்
ஏ-09 வீதியின் புனித திரேசம்மாள் ஆலயத்துக்கு முன்பாக உள்ள வர்த்தக நிலையத்துக்கு அருகில் நின்ற பாரிய வேப்பமரம் இன்று அதிகாலை ஒரு மணி அளவில் விழுந்துள்ளது.

இதன்போது கடையில் உறங்கிக் கொண்டிருந்தவர் காயங்களுக்கு உள்ளாகி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE