இதுவரை நல்லூர் பிரதேச செயலாளராகக் கடமையாற்றிய பா.செந்தில்நந்தனன் யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக நாளை திங்கட்கிழமை முதல் பதவியேற்கிறார். இலங்கை நிர்வாகசேவை அதிவிசேட தரத்தைச் சேர்ந்த இவருக்கு யாழ். மாவட்ட மேலதிக அரச அதிபராக பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு பதவி உயர்வு வழங்கியுள்ளது. இதேவேளை, நல்லூர் பிரதேச செயலாளராக நெடுந்தீவு பிரதேச செயலாளர் ஆ.சிறி நாளை முதல் பொறுப்பேற்கிறார்.