இந்த குழுவிற்கு தலைமை தாங்கி வந்துள்ள பிரிகேடியர் சிந்து இந்த கல்லூரியின் இயக்குனர் ஆவார். இவருடன் உயர் அதிகாரிகள் நால்வரும் இணைந்துள்ளனர்.
இந்த விஜயம் ஓர் சினேக பூர்வமானதொன்று என இலங்கை இராணுவ கட்டளை தளபதி தயா ரடநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இது பற்றி தெரியவருவதாவது, இந்தியா இலங்கை இராணுவ வீரர்களில் 80 சதவீதத்தினருக்கு வெளிநாடுகளில் பயிற்சி வழங்கல் திட்டத்தின் கீழ் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும் இத்திட்டத்தின் மூலம் மேலும் 1000 பேருக்கு பயிற்சியளிக்கவிருப்பதாகவும் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் மேலும் அதிக சந்தர்ப்பத்தை இந்தியா வழங்கும் என்றும் தயா ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதற்கு பதில் அளித்த சிந்து இரு நாட்டு இராணுவ உறவு மிகவும் பலமாக இருப்பதாகவும் இலங்கையின் இராணுவ யுக்திகளை இந்தியா பயன்படுத்தும் என்றும் எதிர்காலத்தில் மேலும் நல்லுறவை பலப்படுத்தும் என்றும் குறிப்பிட்டார்.