இன்று A/L பரீட்சை ஆரம்பம்

147
இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சை நாடளாவிய ரீதியில் 2,200 பரீட்சை மத்திய நிலையங்களில் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இந்த ஆண்டுக்கான பரீட்சையில் 278,196 பாடசாலை பரீட்சார்த்திகளும், 53,513 தனியார் பரீட்சார்த்திகளுமாக 331,709 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.

இன்று ஆரம்பமாகும் உயர்தரப் பரீட்சை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

SHARE