இலங்கைக்கு இரண்டுநாட்கள் உத்தியோகபூர்வ பயணமாக நேற்று வருகைதந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் சந்தித்துப் பேசினார். இருவருக்குமிடையிலான இந்தச் சந்திப்பு இன்று மாலை கொழும்பிலுள்ள இந்திய தூதரக இல்லத்தில் இடம்பெற்றது. இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின்போது ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 40இற்கும் மேற்பட்ட உத்தியோகபூர்வ சந்திப்புகளின் இறுதிச் சந்திப்பாக இது அமைந்தது என இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஷெய்யத் அக்பருடீன் தெரிவித்துள்ளார்.